அருணகிரிநாதருக்கு சிலகாரணங்களால் தொழுநோய் ஏற்பட்டது. உடன் பிறந்தசகோதரியும் அவரைபுறக்கணித்தார். மனம் வெறுத்த அருணகிரியார் திருவண்ணாமலை கோபுரத்தில் ஏறி தற்கொலை செய்ய குதித்தார். அவரை முருகப்பெருமான் தாங்கிக் கொண்டார். நோயை குணப்படுத்தி, அவரது நாக்கில் வேலால் ‘சரவணபவ’ மந்திரத்தை எழுதினார். அன்று முதல் முருகன் மீது திருப்புகழ் பாடத் தொடங்கினார்அருணகிரியார். “முருகா! உன் கால் பட்டதால் என் தலையெழுத்தான பிரம்மாவின் கையெழுத்து அழிந்தது” என தான் பாடிய கந்தர் அலங்காரத்தில் குறிப்பிட்டுள்ளார்.