பதிவு செய்த நாள்
31
மார்
2015
10:03
இளையான்குடி : தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனித் திருவிழா நேற்று முன்தினம் இரவு 11.15 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவில் பரம்பரை டிரஸ்டி வெங்கடேசன் செட்டியார், வி.ஏ.ஒ., இளஞ்செழியன், முன்னாள் ஊராட்சி தலைவர் அய்யாச்சாமி, தடியமங்கலம் ஊராட்சி தலைவர் சேகர், காரைக்குளம் முன்னாள் ஊராட்சி தலைவர் ரவிச்சந்திரன் , கலைக்குளம் ஊராட்சி தலைவர் மலைக்கன்னு, புக்குளி பகுதி நாட்டார்கள், தாயமங்கலம் கிராம மக்கள் பங்கேற்றனர். நேற்று காலை 9.05 மணிக்கு லட்சார்ச்சனை நடந்தது. இரவு 10 மணிக்கு அம்மன் சிம்ம வாகனத்தில் வீதி உலா வந்தார். இன்று இரவு 10மணிக்கு அம்மன் சிம்ம வாகனத்தில் வீதி உலா நடக்கிறது.ஏப்2 மாலை 2மணிக்கு பூக்குழி இறங்குதலும், ஏப்5 காலை 6மணிக்கு பொங்கலும், ஏப்6ல் இரவு 7.15மணிக்கு தேர் பவனி, ஏப் 7 காலை7.40 மணிக்கு பால்குடமும்,மாலை 5.45 மணிக்கு ஊஞ்சலும், இரவு 10.15 மணிக்கு புஷ்ப பல்லக்கும் நடக்கிறது. ஏப்8ல் இரவு 8மணிக்கு திருக்கோயில் தீர்த்தவாரியுடன் திருவிழா நடைபெறுகிறது.