ரிஷபம்: (கார்த்திகை 2,3,4, ரோகிணி, மிருகசீரிடம் 1,2) போட்டியில் வெற்றி!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15ஏப் 2015 02:04
அமைதியும் சாந்தமும் கொண்ட ரிஷப ராசி அன்பர்களே!
கேது 11-ம் இடத்தில் இருந்து நன்மை அளிப்பார். சுக்கிரனால் மாதம் முழுவதும் நன்மை உண்டாகும். பணப்புழக்கத்திற்கு எந்த குறையும் இருக்காது. சமூக அந்தஸ்தை பெறுவீர்கள். குடும்பத்தில் கணவன்-மனைவி இடையே பாசம் மேலோங்கும். சுக்கிரனின் பலத்தால் மே 3 வரை பெண்களால் பொன், பொருள் சேரும். விருந்து விழா என சென்று வருவீர்கள். ஏப். 25,26,27ல் புத்தாடை, நகை வாங்கலாம். தொழில், வியாபாரத்தில் வாடிக்கையாளர் ஆதரவு கிடைக்கும். புதன் சாதகமற்ற நிலையில் இருப்பதால் வீண் செலவு உருவாகலாம். சிக்கனம் தேவை. எதிரிகள் வகையில் கவனம் தேவை. மே 3க்குப் பிறகு அரசின் சலுகை கிடைக்கும். மே 3,4 ல் எதிர்பாராத வகையில் பணவரவு இருக்கும்.
பணியாளர்கள் மேலதிகாரிகளிடம் அனுசரித்தால் கோரிக்கை எளிதில் நிறைவேறும். சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பர். சிலர் தற்காலிக வெளியூர் பயணம் மேற்கொள்ள வேண்டியிருக்கும். மே 3க்கு பிறகு அரசு ஊழியர் களுக்கு நன்மை அதிகரிக்கும்.
கலைஞர்களுக்கு பெண்களால் நன்மை உண்டாகும்.
அரசியல்வாதிகள் உழைப்புக்கு ஏற்ற பலனைக் காணலாம்.
மாணவர்கள் சிரத்தை எடுத்து படிக்க வேண்டிஇருக்கும். ஆனால் புதன் மே 3 முதல் வக்கிரத்தில் இருப்பதால் கல்வியில் சிறப்படைவர். போட்டிகளில் வெற்றி பெற்று மகிழ்வர்.
விவசாயிகள் எதிர்பார்த்த மகசூல் கிடைக்கப் பெறுவர். வழக்கு விவகாரங்களில் மெத்தனமாக இருக்க வேண்டாம்
பெண்கள் குடும்பத்தில் முக்கிய அம்சமாக திகழ்வர். நினைத்ததை நிறைவேற்றி கொள்ளலாம். பிறந்த வீட்டில் இருந்து சீதனப் பொருள் கிடைக்கும். விருந்து விழா என சென்று வருவீர்கள்.