மிதுனம்: (மிருகசீரிடம் 3, 4, திருவாதிரை, புனர்பூசம் 1,2,3) தொழில் வளர்ச்சி!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15ஏப் 2015 02:04
தெய்வ நம்பிக்கை கொண்ட மிதுன ராசி அன்பர்களே!
மாத முற்பகுதியில் நன்மை அதிகரிக்கும் காலமாக அமையும். ராசிக்கு 10-ல் புதன், செவ்வாய், சூரியன் இணைந்திருப்பதும், 6-ல் சனி, 2-ல் குரு இருப்பதும் மிகவும் சிறப்பானது. பெண்களால் பொன், பொருள் சேரும். விருந்து விழா என சென்று வருவீர்கள். குடும்பத் தேவை பூர்த்தி ஆகும். மனதில் குதுõகலம் அதிகரிக்கும். கணவன்-மனைவி இடையே அன்பு மேலோங்கும். புதுமணத் தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். உறவினர் வருகையால் நன்மை கிடைக்கும். ஏப். 28,29ல் புத்தாடை, நகை வாங்கலாம்.தொழில், வியாபாரத்தில் நல்ல வளர்ச்சியைக் காணலாம். லாபத்திற்கு குறைவிருக்காது. புதிய முயற்சியில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். கடந்த கால உழைப்பின் பலனைத் தற்போது பெறுவீர்கள். மே 5,6,7ல் எதிர்பாராமல் பணவரவு இருக்கும்.
பணியாளர்கள் சீரான வளர்ச்சி அடைவர். அரசு ஊழியர்களுக்கு கோரிக்கை எளிதில் நிறைவேறும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். குரு சாதகமாக இருப்பதால் பதவி உயர்வு கிடைக்க யோகமுண்டு. பாதுகாப்பு தொடர்பான பணியாளர்கள் சிறப்பான முன்னேற்றம் காணலாம்.
கலைஞர்கள் மே 3 முதல் புதிய ஒப்பந்தம் கிடைக்கப் பெறுவர். வருமானம் அதிகரிக்கும்.
அரசியல்வாதிகள் பிரதிபலன் எதிர்பாராமல் பாடுபட நேரிடும். மாணவர்கள் புதன் சாதகமான இடத்தில் உள்ளதால் முயற்சிக்கு தகுந்த பலன் அடைவர். ஆசிரியர்களின் அறிவுரை வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.
விவசாயிகள் போதிய மகசூலைப் பெறுவர். கால்நடை மூலம் லாபம் கிடைக்கும். புதிய சொத்து வாங்கும் எண்ணம் மாத முற்பகுதியில் நிறைவேறும். வழக்கு விவகாரத்தில் சாதகமான முடிவு கிடைக்கும்.
பெண்கள் மகிழ்ச்சியுடன் காணப்படுவர். குடும்பத்தாரின் அன்பு கிடைக்கும். விரும்பிய பொருட்களை வாங்குவர். ஏப். 28,29 சிறப்பான நாட்களாக அமையும்.
நல்ல நாள்: ஏப். 17, 18, 19, 20, 23, 24, 28, 29 மே 5, 6, 7, 8, 9, 14.
கவன நாள்: ஏப். 14, மே 10, 11 சந்திராஷ்டமம்.
அதிர்ஷ்டம் எண்: 2,3,9. நிறம்: கருப்பு, பச்சை
வழிபாடு: வெள்ளிக்கிழமை சுக்கிரன், லட்சுமிக்கு அர்ச்சனை செய்யுங்கள். புதன்கிழமை ஏழைகளுக்கு பாசி பயறு தானம் செய்யலாம்.
மேலும்
சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை) »