பெண்ணாடம்: அஷ்டமியையொட்டி, பெண்ணாடம் அழகிய காதலி அம்மன் உடனுறை பிரளயகாலேஸ்வரர் கோவிலில் பைரவர் சுவாமிக்கு நேற்று முன்தினம் சிறப்பு பூஜை நடந்தது. அதையொட்டி, காலை 8:00 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. மாலை 6:00 மணியளவில் பைரவர் சந்தன காப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.