புதுச்சேரி: மொரட்டாண்டி பிரத்தியங்கிரா காளி கோவிலில், அக்னி நட்சத்திர தோஷ நிவர்த்திக்காக அம்மனுக்கு மகா அபிஷேகம் நடந்தது.
புதுச்சேரி அடுத்த மொரட்டாண்டியில், மகா பிரத்தியங்கிரா காளி கோவிலில் அக்னி நட்சத்திர தோஷ நிவர்த்திக்காக, அம்மனுக்கு மகா அபிஷேகம் நடந்தது. மதியம் 12.15 மணிக்கு, அம்மனுக்கு மஞ்சள், குங்கும அபிஷேகங்கள் நடத்தப்பட்டது. விழா ஏற்பாடுகளை ஜனார்த்தன சுவாமிகள் தலைமையில் கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.