காரைக்கால்: காரைக்கால் தலத்தெரு சிவலோகநாதர் கோவிலில் விதை தெளி உற்சவ விழா நடந்தது.மழை வேண்டி காரைக்கால் தலத்தெரு சிவகாமி அம்பாள் சமேத சிவலோக நாதர் கோவிலில் விதை தெளி உற்சவம் நடந்தது. இதையொட்டி நேற்று முன்தினம் மகா கணபதி ஹோமம், அபிஷேக ஆராதனை நடந்தது.ருத்ர கலச பூஜைகள், ருத்ர பாராயணத்துடன் ஹோமம், மகா பூர்ணாஹூதி தீபாராதனை, ருத்ர கலச அபிஷேகம் நடந்தது. நேற்று விதைதெளி உற்சவம் நடந்தது. சிவகாமி அம்பாள் சமேதராக சிவலோகநாதர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். கோவிலின் எதிரே உள்ள நிலத்தில், விதை தெளி உற்சவம் நடந்தது. பக்தர்கள் விதை தெளித்து தரிசனம் செய்தனர்.