Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநி ஆடிப்பெருக்கு விழாவில் ... கொம்பு ஊதி ‘ஆடிவேட்டை’ நடத்தும் கம்பளத்து நாயக்கர்கள்! கொம்பு ஊதி ‘ஆடிவேட்டை’ நடத்தும் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கடைமடையில் களையிழந்த ஆடிப்பெருக்கு!
எழுத்தின் அளவு:
கடைமடையில் களையிழந்த ஆடிப்பெருக்கு!

பதிவு செய்த நாள்

04 ஆக
2015
11:08

நாகப்பட்டினம்: கடைமடை மாவட்டங்களில் உள்ள கிராம மக்கள், ஆடிப்பெருக்கு பண்டிகையை, தங்கள் வீடுகளில் உள்ள குடிநீர் குழாய்களிலும்,  சிலர் கடற்கரையிலும் கொண்டாடினர். ஆண்டு தோறும், ஆடி 18ம் தேதி, நீர்நிலைகளில் மங்கலப் பொருட்களை விட்டு, குடும்பத்துடன் விவசாயி கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடுவது வழக்கம். இவ்வாண்டு, மேட்டூர் அணையில், குறுவை சாகுபடிக்காக, ஜூன் 12ம் தேதி அணை திறப்பு  இல்லாமல் போனது.தற்போது, கர்நாடகாவில் காவிரி நீர் பிடிப்பு  பகுதிகளில் கன மழை பெய்ததால் உபரி நீர் வரத்து காரணமாக, மேட்டூர் அணை நீ ர்மட்டம் உயர்ந்தது. இதனால், ஆடிப்பெருக்கு பண்டிகையை கொண்டாடும் வகையில், மேட்டூர் அணையில் தண்ணீர் திறந்து விட, தமிழக அரசு  உத்தரவிட்டது. அணை திறக்கப்பட்டு பல நாட்கள் ஆகியும், முறையான பராமரிப்பு இல்லாமல் சேதமடைந்துள்ள மதகுகள், துார்ந்து போய்  கிடக்கும் கால்வாய்களால், கடைமடை பகுதிகளுக்கு நீர் வரவில்லை. இதன் காரணமாக, பொதுமக்களும், விவசாயிகளும் ஏமாற்றமடைந்துள்ளனர்.  தொன்று தொட்டு கொண்டாடப்படும் ஆடிப்பெருக்கு விழாவை, கரை புரண்டோடும் நீர்நிலைகளில் கோலாகலமாகக் கொண்டாட முடியாவிட்டா லும், மனம் தளராத மக்கள், தங்கள் வீடுகளில் உள்ள குடிநீர் குழாய்களுக்கு மங்கலப் பொருட்களை வைத்து பூஜை செய்தனர். சிலர், நாகை கடல்  பகுதிக்கு வந்து பூஜை செய்து, மஞ்சள், காதோலை, கருகுமணி, குங்குமம், பலவித பழங்கள் என்று மங்கலப் பொருட்களை கடல் நீரில் விட்டு,  கடவுளை வழிபட்டு சென்றனர். ஆடிப்பெருக்கு பண்டிகை என்றால், மக்களிடம் வழக்கமாகக் காணப்படும் ஆரவாரம் காணப்படவில்லை.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவாரூர் : ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோயிலில் குருபெயர்ச்சி விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. ... மேலும்
 
temple news
தஞ்சாவூர் தஞ்சாவூர் மாவட்டம் தென்குடித்திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவிலில், (பரிகார ஸ்தலம்),  குரு ... மேலும்
 
temple news
சோழவந்தான், சோழவந்தான் அருகே குருவித்துறை குருபகவான் கோயிலில் இன்று மாலை குரு பெயர்ச்சி விழா நடந்தது. ... மேலும்
 
temple news
திருக்கோஷ்டியூர், திருப்புத்தூர் அருகே பட்டமங்கலம் தட்சிணாமூர்த்தி கோயிலில்  குரு பெயர்ச்சியை ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; பேரூரில், பேரூர் பட்டி நாயகர் சைவ நெறி அறக்கட்டளை சார்பில், 450 கிலோ பூக்கள் கொண்டு, மலர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar