பதிவு செய்த நாள்
04
செப்
2015
05:09
ராஜபாளையம்: ராஜபாளையம் திருவனந்தபுரம் பச்சமடம் தெரு திருப்பதி கோயிலில் உற்சவ மூர்த்தி பிரதிஷ்டை, கும்பாபிஷேகத்துடன் நேற்று காலை நடந்தது. திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் இருந்து வாங்கி வரப்பட்ட வெங்கடாஜலபதி, ஸ்ரீதேவி, பூதேவி சிலைகள், கோயிலில் காலை 10.30 மணிக்கு பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு அலங்காரம், பூஜைகள் நடந்தன. மாலை 5.30 மணிக்கு திருக்கல்யாணம் இரவு 7.25 மணிக்கு சுவாமி புறப்பாடு நடந்தது. திருவனந்தபுரம் கோட்டை தலைவர் பலராம் ராஜா, செயலாளர் சத்திய நாராயண ராஜா, பொருளாளர் ராமசுப்பிரமணிய ராஜா, ராம்கோ சேர்மன் பி.ஆர்.ராமசுப்பிரமணிய ராஜா, பழையபாளையம் ராஜூக்கள் மகாசபை தலைவர் தனுஷ்கோடி ராஜா, சக்கராஜாக்கோட்டை தலைவர் ராஜூ, தொழிலதிபர்கள் சின்னவெங்கட் ராஜா, வெங்கடேச ராஜா, சிங்கராஜாகோட்டை செயலாளர் பூபதி ராஜா, மாப்பிள்ளை விநாயகர் நற்பணி மன்ற தலைவர் ராமராஜூ உட்பட பலர் கலந்துகொண்டனர்.