பதிவு செய்த நாள்
10
அக்
2015
10:10
திருவள்ளூர்:திருவள்ளூர், வீரராகவ பெருமாள் கோவிலிற்கு, ஒவ்வொரு அமாவாசையன்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து, முன்னோர்களுக்கு திதி கொடுத்து வருகின்றனர். இதற்காக, இங்குள்ள ஹிருதாபநாசினி ன்றழைக்கப்படும் கோவில் குளத்தில், பக்தர்கள் குளிப்பது வழக்கம். ஏழரை ஏக்கர் பரப்பளவு கொண்ட இக்குளம் முழுவதும் தண்ணீர் நிரப்பும் வகையில், 1 கோடி ரூபாய் மதிப்பில், புனரமைக்கும் பணி, ஓராண்டாக நடைபெற்று வருகிறது. இதில், பக்தர்கள் பாதுகாப்பாக குளிப்பதற்கு வசதியாக, குளத்தின் ஒரு பகுதியில் மூன்று பிரம்மாண்ட தொட்டிகள் கட்டப்பட்டு உள்ளன. இந்த நிலையில், குளத்தில் தண்ணீர் தேங்கி நிற்கும் வகையில், அதில் வண்டல் மண் நிரப்பும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக, பாண்டூர் ஏரியில் இருந்து வண்டல் மண் எடுத்து வரப்பட்டு, குளத்தில் கொட்டப்பட்டு உள்ளது.குளத்தில் தண்ணீர் வற்றினாலும், வண்டல் மண் மூலம் நீர்ப்பதம் எப்போதும் இருப்பதோடு, மழைக் காலத்தில் சிறிதளவு தண்ணீர் வந்தாலும், குளம் வற்றாமல் இருக்கும் என கூறப்படுகிறது.