Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் ... திருவொற்றியூர்  தேர் வெள்ளோட்டம், கும்பாபிஷேகம் கோலாகலம்! திருவொற்றியூர் தேர் வெள்ளோட்டம், ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மகாமக குளத்தை சுற்றியுள்ள 16 சோடமகாலிங்க மற்றும் நாகேஸ்வரன் கோயில் கும்பாபிஷேகம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 நவ
2015
11:11

தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில், உலக பிரசித்தி பெற்ற மகாமக திருக்குளத்தை சுற்றிலும் 16 மண்டபங்களில் அமைந்துள்ள சோடசமகாலிங்க சுவாமிகளுக்கு இன்று  மகாகும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது.

Default Image

Next News

இதில் பல்லாயிரக் கணக்காண பக்தர்கள் நான்கு கரைகளிலும் திரண்டு நின்று தரிசனம் செய்து மகிழ்ந்தனர். 12 ஆண்டுகளுக்கு ஓர் முறை நடைபெறும் மகாமக பெருவிழா வருகிற பிப்ரவரி மாதம் 22ம் தேதி நடைபெறுகிறது இதனை யொட்டி கும்பகோணம் நகரில் உள்ள முக்கிய சைவ மற்றும் வைணவத்தலங்களில் கும்பாபிஷேகங்கள் அடுத்தடுத்து நடந்து வருகிறது. இப்புனித குளத்தின் உள்ளே கங்கா, பிர்மா, யமுனை,  கோதாவரி, நர்மதை, சரஸ்வதி, உள்ளிட்ட 20 வகையான தீர்த்த கிணறுகள் உள்ளன மேலும் மகாமக குளத்தை சுற்றிலும் 16 வகையான தானங்களை வலியுறுத்தும் வகையில் 16 மண்டபங்கள் அமைந்துள்ளன. அதில் ஒவ்வொரு மண்டபத்திலும் பிரம்மதீர்ததேஸ்வரர், முகுந்தேஸ்வரர், தனேஸ்வரர், விருஷபேஸ்வரர், உள்ளிட்ட மொத்தம் 16 சிவலிங்க திருமேனிகள் அமைந்துள்ளன இவற்றை ஒருங்கிணைத்து சோடஷ மகாலிங்க சுவாமிகள் என குறிப்பிடுவது வழக்கம்.

இத்தகைய சோடஷமகாலிங்க சுவாமிகளுக்கு தமிழக அரசு ரூபாய் 19 லட்சத்தி 38 ஆயிரம் மதிப்பீட்டில் திருப்பணிகள் செய்து முடிக்கப்பெற்றதை தொடர்ந்து கும்பாபிஷேகத்திற்காண யாகசாலை பூஜைகள் கடந்த 27ம் தேதி சர்வசாதகம் ராமநாத சிவாச்சாரியார் தலைமையில் தொடங்கி இன்று 4ம் கால யாகசாலை பூஜை நிறைவாக மகா பூர்ணாஹதியும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. பின்னர் கடங்கள் புறப்பாடு நடைபெற்று வரிசையாக தென்மேற்கு பகுதியில் உள்ள மண்டபத்தில் இருந்து திருவலமாக சென்று 16 மண்டபத்திற்கும் அடுத்தடுத்து மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது.

இதில் பல்லாயிரக்கணக்காண மக்கள் நான்கரைகளிலும் திரண்டு நின்று தரிசனம் செய்து மகிழ்ந்தனர். இதைபோல, கும்பகோணம் நாகேசுவரசுவாமி கோயிலில் பிரகன்நாயகி உடனாய நாகேசுவவரர் மூலவராக எழுந்தருளியுள்ளார். மகாமக பெருவிழாவை முன்னிட்டு இக்கோயில் 1கோடியே 35 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான திருப்பணிகள் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில், கடந்த 25ம் தேதி காலை விக்னேஸ்வரபூஜை உள்ளிட்ட பூர்வாங்க பூஜைகள் தொடங்கியது. 26ம் தேதி காலை சாந்திஹோமம், மூர்த்தி ஹோமம், திசா ஹோமம், சம்ஹிதாஹோமம் நடைபெற்றது. இதையடுத்து காவிரி ஆற்றிலிருந்து புனித நீர் யானை மீது கொண்டு வரப்பட்டு முதல்கால யாகசாலை பூஜைகள் தொடங்கியது.

இதையெடுத்து, இன்று காலை வரை 6 கால யாகசாலை பூஜைகள் நடைபெற்று. புனித கடங்கள் புறப்பட்டு சக விமானங்கள், ராஜகோபுரங்களுக்கு சென்றடைந்து மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது. இரவு சுவாமி திருவீதியுலா நடைபெறுகிறது. யாகசாலை பூஜை காலங்களில் வேதபாராயணம், தேவாரங்கள் சிறப்பு மங்கள இசைகளும், நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பவுர்ணமியில் இருந்து வரும் நான்காவது திதி சங்கடஹர சதுர்த்தியாகும். முழு முதற்கடவுளாகிய விநாயகப் ... மேலும்
 
temple news
அவிநாசி; அவிநாசி ஸ்ரீ கருணாம்பிகை உடனமர் லிங்கேஸ்வரர் கோவில் சித்திரை தேர் திருவிழாவில் 13ம் நாள் ... மேலும்
 
temple news
செஞ்சி; பொன்பத்தி திரவுபதி அம்மன் கோவிலில் அக்னி வசந்த விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.செஞ்சி ... மேலும்
 
temple news
ஆலங்குடி: குரு பெயர்ச்சியை முன்னிட்டு, குரு பரிகார தலமான ஆலங்குடியில் இன்று லட்சார்ச்சனை துவங்கியது. ... மேலும்
 
temple news
கடலூர்; கடலூர் அடுத்த புதுவண்டிப்பாளையம் கரையேறவிட்டக்குப்பத்தில் அப்பர் குளத்தில் கரையேறும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar