Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இன்றைய சிறப்பு! திருக்கண்ணாடி அறையில் வரதராஜ பெருமாள் அருள்பாலிப்பு! திருக்கண்ணாடி அறையில் வரதராஜ ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலையில் ஜன.,19 வரை நெய்யபிஷேகம்: 21ல் நடை அடைப்பு!
எழுத்தின் அளவு:
சபரிமலையில் ஜன.,19 வரை நெய்யபிஷேகம்: 21ல் நடை அடைப்பு!

பதிவு செய்த நாள்

06 ஜன
2016
11:01

சபரிமலை: மகரஜோதி தரிசனத்துக்கு பின்னர் ஜன.,19-வரை நெய்யபிஷேகம் நடைபெறும் என்றும், 21ம் தேதி நடை அடைக்கப்படும் என்றும் ÷ தவசம்போர்டு அறிவித்துள்ளது. சபரிமலையில் இந்த ஆண்டு மகரஜோதி தரிசனம் வரும் 15-ம் தேதி நடக்கிறது. அதன் பின்னர் 18 வரை நெய்யபி ஷேகம், 19-ல் மாளிகைப்புறத்தில் குருதி, அன்று இரவு வரை பக்தர்களுக்கு தரிசனம், 20 காலை ஏழு மணிக்கு பந்தளம் மன்னர் பிரதிநிதி  முன்னிலையில் நடை அடைப்பு என அறிவிக்கப்பட்டிருந்தது. திருவிதாங்கூர் தேவசம்போர்டின் 2016-ம் ஆண்டு காலண்டர் மற்றும் டைரியில்  அவ்வாறுதான் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் மகரவிளக்குக்கு பின் நடை திறந்திருக்கும் நாட்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் தேவசம்போர்டு  மாற்றம் செய்துள்ளது. இதன் படி 19-ம் தேதி காலை 9.30 வரை நெய்யபிஷேகம் நடைபெறும். அன்று 11.30-க்கு தேவசம்போர்டு சார்பில் களபாபி ஷேகம் நடைபெறும். 20-ம் தேதி காலை ஐந்து மணிக்கு நடை திறந்து வழக்கமான உஷபூஜை, உச்சபூஜை, அத்தாழபூஜை போன்றவை  நடைபெற்றாலும், நெய்யபிஷேகம், களபாபிஷேகம் கிடையாது. அன்று இரவு பத்து மணிக்கு நடை அடைக்கும் வரை பக்தர்களுக்கு தரிசனம்  உண்டு. இரவு மாளிகைப்புறத்தில் குருதிபூஜை நடைபெறும். அதன் பின்னர் பக்தர்களுக்கு சன்னிதானத்தில் அனுமதி கிடையாது. 21-ம் தேதி  அதிகாலை ஐந்து மணிக்கு நடை திறந்து அபிஷேகம், கணபதி ஹோமம் நடத்திய பின்னர் பந்தளம் மன்னர் பிரதிநதி முன்னிலையில் நடைஅடைக்கப்படும்.  தேவசம்போர்டின் புதிய அறிவிப்பு மூலம் மகரவிளக்குக்கு பின்னர் நடை திறந்திருக்கும் நாள் ஒரு நாள் அதிகமாகியுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை : அழகர் மலையிலிருந்து ஏப்., 21ல், தங்கப் பல்லக்கில் புறப்பட்டார் அழகர். ஏப்., 23ல் காலை வைகையாற்றில் ... மேலும்
 
temple news
உடுமலை; பூலாங்கிணறு முத்தாலம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.உடுமலை பூலாங்கிணறு ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் தெப்ப உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. திரளான ... மேலும்
 
temple news
திருக்கனுார்: கூனிச்சம்பட்டு திரவுபதியம்மன் கோவிலில், தீமிதி உற்சவத்தை முன்னிட்டு, ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
தேவகோட்டை; தேவகோட்டை கோதண்டராமர் ஸ்வாமி கோயில் ராமநவமி பிரமோற்சவ விழா கடந்த 17 ந்தேதி காலையில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar