ஜெய்ஹிந்த்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தை உற்சவம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06பிப் 2016 06:02
மதுரை: ஜெய்ஹிந்த்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தை உற்சவ விழா சிறப்பாக நடைபெற்றுவருகிறது. விழாவில் நான்காம் தைவெள்ளியை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. பத்ரகாளியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில், மதுரை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயபாலன், போலீஸ் இன்ஸ்பெக்டர் சிதம்பரம் முருகேசன் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.