ஊட்டி நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ளது. சந்தைக் கடை மாரியம்மன் கோயில். இங்கு மகா மாரியம்மன், மகா காளியம்மன் என இரு அம்மன்கள் ஒரே கருவறையில் வீற்றிருக்கின்றனர். இக்கோயிலிலுள்ள நவக்கிரக நாயகர்கள் தம்பதி சமேதர்களாக வீற்றிருப்பது சிறப்பு. அம்மை நோய் கண்டவர்கள். கண் பார்வை இழந்தவர்கள். இங்குள்ள மாரியம்மனிடம் வேண்டிக் கொள்ள, பூரண குணம் கிடைக்கிறது. இவைதவிர, திருமணம், குழந்தை பாக்கியம் வேண்டியும், விவசாயம் செழிக்கவும் பிரார்த்தனை செய்கிறார்கள். பிரார்த்தனை நிறைவேறியவுடன் அம்மனுக்கு கோழிக்குஞ்சு மற்றும் கருப்புப் புடவை காணிக்கையாக செலுத்தப்படுகிறது. மேலும் சிறு அளவில் தேர் செய்தும் தேர்த்திருவிழா அன்று நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள்.