எல்லாரும் மகிழ்வுடன் வாழ விரும்பும் மகர ராசி அன்பர்களே! (செல்வாக்கு கூடும்)
சூரியன், சனி சாதகமாக இருந்து சிறப்பான பலன் தருவார்கள். புதன் ஜூன் 20ல் இருந்து ஜூலை 6 வரை நன்மை தருவார். தற்போது நன்மை தரும் செவ்வாய் ஜூன் 19-ந் தேதி வக்கிரம் அடைவதால் பலன் குறையும். 8-ம் இடத்தில் இருக்கும் குரு பகவான் பொதுவாக மன வேதனையும், நிலையற்ற தன்மையும் கொடுப்பார். அவரது 7ம் இடத்து பார்வையால், உங்களுக்கு எந்த இடையூறு வந்தாலும் அதை குருவின் பார்வை முறியடித்து வெற்றிக்கு வழிவகுக்கும். பொருளாதார வளம் கூடும். குடும்பத்தில் நல்ல மதிப்பு இருக்கும். ஜூன் 19க்கு பிறகு புதனால் எடுத்த செயல் வெற்றி அடையும். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் நடக்கும். ஜூன் 23,24 ஆகிய தேதிகளில் பெண்களால் கூடுதல் நன்மை கிடைக்கும்.
தொழில், வியாபாரத்தில் சுமாரான லாபம் எதிர்பார்க்கலாம். போட்டியாளர்களின் இடையூறு மறையும். பங்குதாரர்களிடையே ஒற்றுமை ஏற்படும். மாதத் தொடக்கத்தில் அலைச்சல் அதிகரிக்கும்.
பணியாளர்களுக்கு அலுவலகத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். நண்பர்கள் மற்றும் சக ஊழியர்கள் மிகவும் உதவிகரமாக இருப்பர். கலைஞர்களுக்கு முயற்சிகளில் இருந்த தடையும், மனதில் ஏற்பட்ட சோர்வும் மறையும். அரசியல்வாதிகளுக்கு வசதிகள் பெருகும். மாணவர்கள் அதிக சிரத்தை எடுத்து படிக்க வேண்டியது இருக்கும். போட்டிகளில் வெற்றி காணலாம். விவசாயிகளுக்கு நல்ல வருமானம் கிடைக்கும். புதிய சொத்து வாங்கும் எண்ணம் கைகூடும்.
பெண்களுக்கு தடைபட்டு வந்த திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் கைகூடும். சிலர் குழந்தை பாக்கியம் பெறுவர். நல்ல நாள்: ஜூன் 19,20,21,26,27,28,29, 30, ஜூலை3,4,5,8,9,16 கவன நாள்: ஜூலை 8,9 சந்திராஷ்டமம். அதிர்ஷ்ட எண்: 3,7 நிறம்: செந்துõரம், கருப்பு
பரிகாரம்: ராகு காலத்தில் பைரவரை வணங்குங்கள். வெள்ளிக்கிழமை ரங்கநாதர் வழிபாடு பலன் தரும்.
மேலும்
சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை) »