கிள்ளை: கிள்ளை சரவணா நகர், கல்யாண கண்ணன் கோவிலில் கோகுலாஷ்டமியை முன்னிட்டு 50ம் ஆண்டு கோ பூஜை மற்றும் உறியடி விழா ÷ காலாகலமாக நடந்தது. விழாவையொட்டி நேற்று காலை உற்சவர் மற்றும் மூலவருக்கு சிறப்பு அபிஷேகமும், பின்னர் 9:00 மணியில் இருந்து 10:30 மணிக்குள் 101 கோ பூஜையும், மாலை 5:00 மணிக்கு கல்யாண கண்ணன் வீதியுலாவும் அதனைத் தொடர்ந்து உறியடி விழாவும் நடந்தது. ஏற்பாடுகளை சக்கரவர்த்தி தலைமையிலான விழாக் குழுவினர்கள் செய்திருந்தனர். கிள்ளை வர்த்தக சங்கத் தலைவர் பாஸ்கர், தொடக்க ÷ வளாண்மை கடன் சங்கத் தலைவர் சேதுராமன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் அன்னதானம் வழங்கினர். இதேப்போன்று, கிள்ளை கடைவீதியில் உள்ள ஆஞ்சநேய சுவாமி கோவிலிலும் கோ பூஜை மற்றும் உறியடி விழா நடந்தது.
பரங்கிப்பேட்டை: பு.முட்லுார் ராமர் அனுமார் கோவிலில் கோகுலாஷ்டமியை முன்னிட்டு 127 கோ பூஜை விழா நடந்தது. ராமர் அனுமான் தர்ம பரிபாலன அறக்கட்டளை அறங்காவலர் சீனு என்கிற ராமதாஸ் தலைமை தாங்கினார். கோகுலாச்சாரியார் முன்னிலை வகித்தார். 127 கோ பூஜையை சிதம்பரம் ரங்காச்சாரியார் சுவாமி துவக்கி வைத்தார். பி.டி.ஓ., செல்வராஜ், ராம அனுமான் நிர்வாகி செந்தமிழ்ச்செல்வி, விவசாய சங்க தலைவர் விஜயகுமார், சுபாஷ் சந்திரபோஸ், கிராமத் தலைவர் உத்திராபதி உட்பட பலர் பங்கேற்றனர்.