பதிவு செய்த நாள்
03
செப்
2016
12:09
திட்டமிட்டு பணியாற்றி வளர்ச்சி காணும் அன்பர்களே! (அரசு சன்மானம்)
இந்த மாதமும் கடந்த காலம் போலவே குரு, சுக்கிரன் இருவரும் நன்மை தரும் நிலையில் இருக்கின்றார்கள். மற்ற கிரகங்கள் அனைத்தும் சாதகமற்ற இடத்தில் இருப்பதால் எந்த ஒரு செயலையும் சற்று முயற்சி எடுத்தே நிறைவேற்ற வேண்டியதிருக்கும். ஆனால் உங்கள் முயற்சிக்கு தகுந்த பலன்கள் கிடைக்காமல் போகாது. குருவால் ஆற்றல் மேம்படும். மனதில் துணிச்சல் பிறக்கும். அதிர்ஷ்டவசமாக வருமானம் உயரும். சுக்கிரனால் மாதத் தொடக்கத்தில் பொருளாதார வளம் சிறக்கும். மாதபிற் பகுதியில் செல்வாக்கு அதிகரிக்கும். புதன் சாதமற்ற நிலையில் இருப்பதால் அநாவசிய விவாதத்தில் ஈடுபடுவதை தவிர்க்கவும். குடும்பத்தில் புதனால் சில பிரச்னை உருவாக வாய்ப்புண்டு. உறவினர்கள் வகையில் கருத்துவேறுபாடும் ஏற்படலாம். ஆனால் இந்த நிலை சுக்கிரனால் செப்.19க்கு பிறகு மறைந்து விடும். அதன் பின் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பிரிந்த தம்பதியினர் ஒன்று சேருவர். குழந்தை பாக்கியம் கிடைக்க யோகமுண்டு. கணவன்-, மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். செப்.28,29ல் பெண்களால் நன்மை பெறலாம். அவர்களால் பொன், பொருள் சேரும். செப்.23,24,25ல் உறவினர் வருகையால் நன்மை கிடைக்கும். அதே நேரம் அக்.5,6,7ல் அவர்களால் வீண் விரோதம் உருவாக வாய்ப்புண்டு. எனவே சற்று ஒதுங்கி இருப்பது நல்லது. சூரியனால் ஏற்பட்ட அலைச்சல், சோர்வு, செல்வாக்கு பாதிப்பு முதலியன மறையும். ஆனால் இந்த மாதம் பிள்ளைகள் நலனில் அக்கறை செலுத்துவது அவசியம்.
தொழில், வியாபாரத்தில் செப்.19 வரை அரசு வகையில் ஆதாயம் கிடைக்கும். வங்கி கடன் எளிதாக கிடைக்கும். லாபம் சிறப்பாக இருக்கும். ஆனால், புதிய வியாபாரத்திற்காக அதிக முதலீடு செய்ய வேண்டாம். கூட்டாளிகளிடையே ஒற்றுமை பலப்படும். எதிரிகளின் இடையூறை முறியடிக்கும் வலிமை குருபகவானால் பெறுவீர்கள். செப்.26,27,30, அக்.1,2ல் சந்திரனால் பண விரயம் ஆகலாம். ஆனால் அக்.10,11ல் எதிர்பாராத பண வரவு இருக்கும்.
பணியாளர்கள் தொடர்ந்து அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். அதற்கான ஊதியம் நிச்சயம் கிடைக்கும். செப்.19க்கு பிறகு பதவி உயர்வு கிடைக்கும். பணியிடத்தில்
செல்வாக்கு அதிகரிக்கும். இடமாற்ற பீதி அடியோடு மறையும். நெருப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் சற்று விழிப்புடன் இருப்பது நல்லது.
கலைஞர்களுக்கு மாதத் தொடக்கத்தில் அரசிடம் இருந்து விருது, சன்மானம் போன்றவை கிடைக்கும். தொழில் ரீதியான வெளியூர் பயணத்தின் மூலம் இனிய அனுபவம் பெறுவீர்கள்.
அரசியல்வாதிகள், சமூகநல சேவர்கள் சுமாரான பலனையே காண்பர். பதவி கிடைப்பதில் தாமதம் உண்டாகும்.
மாணவர்கள் இம்மாதம்தொடர்ந்து சிரத்தை எடுத்தே முன்னேற வேண்டியதிருக்கும். ஆனால் குருபகவானால் ஆசிரியர்களின் உதவி கிடைக்கும். போட்டியில் வெற்றி பெற விடாமுயற்சி தேவைப்படும்.
விவசாயிகள் கடினமாக உழைக்க நேரிடும். ஆனால், அதற்கான பலன் கிடைக்காமல் போகாது. பயறு வகைகள், காய்கறிகள், பழ வகைகள் மூலம் நல்ல வருமானம் காணலாம். புதிய சொத்து வாங்கும் எண்ணத்தை தள்ளி வைக்கவும்.
பெண்கள் மகிழ்ச்சியோடு காணப்படுவர். கணவரின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலனைப் பெறுவர். சுய தொழில் செய்து வரும் பெண்களுக்கு வங்கிக்கடன் எளிதாக கிடைக்கும். அக்.3,4ல் புத்தாடை, அணிகலன் கிடைக்கும். பெற்றோர் வீட்டில் இருந்து பொருட்கள் சீதனமாக வரப் பெறலாம். அக்.4க்கு பிறகு மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். உறவினர்களிடம் சுமூக நிலை உண்டாகும். அக்.12,13ல் விருந்து விழா என சென்று வருவீர்கள். சகோதரிகளால் உதவி கிடைக்கும்.
நல்ல நாள்: உங்கள் ராசிக்கு செப். 21,22,23, 24,25,28,29 அக்டோபர் 3,4,10,11,12,13 ஆகியவை நல்ல நாட்களாகும். இந்த நாட்களில் சுபநிகழ்ச்சிகளுக்குரிய ஏற்பாடு துவங்குதல், பயணம் செல்லுதல் ஆகியவற்றைச் செய்யலாம்.
கவன நாள்: ஒரு ராசிக்கு எட்டாமிடத்தில் சந்திரன் சஞ்சரிக்கும் காலம் தான் சந்திராஷ்டமம். அந்த வகையில் உங்கள் ராசிக்கு 8-ம் இடமான மீனத்தில் சந்திரன் செப். 17,18, அக்.14,15,16ல் இருப்பார். இந்த காலத்தில் வீண்விவாதங்களை தவிர்த்து இறை வழிபாட்டில் கவனம் செலுத்தவும். பண விஷயத்தில் விழிப்பு தேவை.
அதிர்ஷ்ட எண்: 3,5 நிறம்: வெள்ளை, மஞ்சள்
பரிகாரம்: சனி தோறும் சனீஸ்வரருக்கு எள் எண்ணெய் தீபமிடுவதோடு, காக்கைக்கு அன்னமிடுங்கள். ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவுங்கள். பசுவுக்கு பசுந்தழை கொடுங்கள். ஆஞ்சநேயரை சனிக்கிழமை தரிசியுங்கள். ராகு காலத்தில் துர்க்கையை வழிபடுங்கள்.