பதிவு செய்த நாள்
03
செப்
2016
12:09
துணிச்சலால் வெற்றி பெறும் அன்பர்களே! (நகை வாங்கலாம்)
இந்த மாதம் சுக்கிரன் அக்.4ல் இடம் மாறினாலும் மாதம் முழுவதும் நற்பலன் கொடுப்பார். சூரியன், செவ்வாய் ஆகியோராலும் நன்மை கிடைக்கும். எடுத்த செயல் வெற்றிகரமாக முடியும். கடந்த காலத்தில் சூரியனால் ஏற்பட்ட பொருள் விரயம் மறையும். பொருளாதார வளம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். ஆடம்பர வசதி கூடும். ஆடை, ஆபரணம் சேரும். தம்பதியினரிடையே அன்பு பெருகும். புது மணத்தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். செப்.19க்கு பிறகு அடிக்கடி விருந்து விழா என சென்று வர வாய்ப்புண்டு. செப்.26,27ல் பெண்கள் உறுதுணையாக இருப்பர். அக்.4க்கு பிறகு பெரியோர் ஆதரவும், ஆலோசனையும் கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பர். சகோதரர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். பக்தி உயர்வு மேம்படும். உடல்நலம் சிறப்படையும். பித்தம், கண் தொடர்பான நோய் பூரணமாக குணமடையும்.
தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். செவ்வாயால் பொருளாதார வளம் அதிகரிக்கும். வங்கி நிதியுதவியுடன் விரிவாக்கப்பணிகளில் ஈடுபடுவீர்கள். போட்டியாளர் தொல்லையில் இருந்து விடுபடுவீர்கள். செப்.19க்கு பிறகு வணிகத்தை
விரிவுபடுத்தலாம். லாபம் அதிகரிக்கும். அக்.8,9ல் எதிர்பாராத வகையில் பணவரவுக்கு வாய்ப்பிருக்கிறது. செப்.23,24,25,28,29ல் முயற்சியில் தடை வரலாம். அக்.8,9ல் பகைவரை வெல்லும் ஆற்றல் உண்டாகும். புதனால் ஏற்பட்ட அவப்பெயர், செல்வாக்கு பாதிப்பு, வீண்கவலை முதலியன செப்.29க்கு பிறகு மறையும். ஆனால் அதன்பின் அரசு வகையில் அனுகூலமான போக்கு காணப்படவில்லை.எனவே கணக்கு வழக்குகளை சரியாக வைத்துக் கொள்ளவும்.
பணியாளர்கள் எதிர்பார்த்த கோரிக்கை நிறைவேறும். பாதுகாப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் சிறப்பான முன்னேற்றம் காணலாம். மாதத் தொடக்கத்தில் தனியார் துறையில் வேலை பார்ப்பவர்களுக்கு புதிய பதவி தேடி வரும். திறமைக்கு ஏற்ற வருமானம் கிடைக்கும். செப்.29க்கு பிறகு அரசு வேலையில் இருப்பவர்கள் வேலையில் அக்கறையுடன் இருக்கவும். ராகுவால் நெருப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும். பொருட்களை களவு கொடுக்க நேரிடலாம். செப்.19,20ல் எதிர்பாராத நன்மை கிடைக்கும்.
கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். தட்டிப் பறிக்கப்பட்ட புகழ், பாராட்டு கிடைக்கும். தொழில் ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும்.
அரசியல்வாதிகள் புதிய பதவியோடு பண வரவையும் காணலாம்.சமூகநல சேவகர்கள் திருப்திகரமாக செயல்படுவர்.
மாணவர்கள் சிரத்தை எடுத்து படிக்க வேண்டியதிருக்கும். முயற்சிக்கேற்ப முன்னேற்றம் உண்டாகும். பெற்றோர், ஆசிரியர்களின் அறிவுரை கைகொடுக்கும். நட்பு விஷயத்தில் விழிப்புடன் இருப்பது நல்லது.
விவசாயிகள் எதிர்பார்த்த விளைச்சல் கிடைக்கும். விளைபொருளுக்கு அதிக ஆதாயமும் கிடைக்கும். கால்நடை வகையில் வருமானம் உயரும். பக்கத்து நிலக்காரர்கள் வகையில் இருந்த தொல்லை மறையும். புதிய சொத்து வாங்க யோகம் உண்டாகும். வழக்கு, விவகாரங்களில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும்.
பெண்கள் குடும்பத்தாரிடம் நன்மதிப்பை பெறுவர். உங்களால் வீட்டிற்கு பெருமை உண்டாகும். செப்.19க்கு பிறகு வாழ்வில் நன்மை அதிகரிக்கும். வேலைக்கு செல்லும் பெண்கள் வளர்ச்சி காண்பர். பெண் பணியாளர்கள் சிறப்பான பலன் பெறுவர். சிலருக்கு புதிய பதவி தேடி வரும். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சி கைகூடும். குடும்பத்தோடு புனித தலங்களுக்கு சென்று வருவீர்கள். செப்.30, அக்.1,2ல் புத்தாடை, ஆபரணம் வாங்கலாம். பெற்றோர் வீட்டில் இருந்து சீதனம் வரப் பெறலாம். அக்.10,11ல் விருந்து விழா என சென்று வருவீர்கள்.
நல்ல நாள்: உங்கள் ராசிக்கு செப். 19,20,21, 22,26,27,30, அக். 1,2,8,9,10,11 ஆகியவை நல்ல நாட்களாகும். இந்த நாட்களில் சுபநிகழ்ச்சிகளுக்குரிய ஏற்பாடு துவங்குதல், பயணம் செல்லுதல் ஆகியவற்றைச் செய்யலாம்.
கவன நாள்: ஒரு ராசிக்கு எட்டாமிடத்தில் சந்திரன் சஞ்சரிக்கும் காலம் தான் சந்திராஷ்டமம். அந்த வகையில் உங்கள் ராசிக்கு 8-ம் இடமான கும்பத்தில் சந்திரன் அக்.12,13ல் இருப்பார். இந்த காலத்தில் வீண் விவாதங்களை தவிர்த்து இறைவழிபாட்டில் கவனம் செலுத்தவும். பண விஷயத்தில் விழிப்பு தேவை.
அதிர்ஷ்ட எண்: 1,9 நிறம்: சிவப்பு, வெள்ளை
பரிகாரம்: வியாழக்கிழமை தட்சிணாமூர்த்தியை வழிபடுங்கள். பெருமாள் கோவிலில் விளக்கேற்றி வழிபருங்கள். சனிக்கிழமை காக்கைக்கு அன்னமிடுங்கள். புதன்கிழமை குலதெய்வத்தை வணங்குங்கள். ஏழைகளுக்கு ஆடை தானம் செய்யுங்கள். துர்க்கை வழிபாடு நல்வாழ்வுக்கு துணை நிற்கும்.