Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தனுசு: (மூலம், பூராடம், உத்திராடம் 1) கும்பம்: (அவிட்டம் 3,4, சதயம், பூரட்டாதி 1,2,3) கும்பம்: (அவிட்டம் 3,4, சதயம், பூரட்டாதி ...
முதல் பக்கம் » சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை)
மகரம்: (உத்திராடம் 2,3,4, திருவோணம், அவிட்டம் 1,2)
எழுத்தின் அளவு:
மகரம்: (உத்திராடம் 2,3,4, திருவோணம், அவிட்டம் 1,2)

பதிவு செய்த நாள்

03 செப்
2016
12:09

நல்லவர்களுக்கு உதவிட விரும்பும் அன்பர்களே! (பதவி உயர்வு)

இந்த மாதம் குரு, சனி தொடர்ந்து நன்மை தருவார்கள். புதன் செப்.29 வரையும், சுக்கிரன் செப்.19 வரையும் அக்.4க்கு பிறகும் நற்பலனை தருவார்கள். தடைகள் குறுக்கிட்டாலும் விடாமுயற்சியால் எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். பணப்புழக்கத்தில் எந்த குறையும் இருக்காது. சூரியன் சாதகமற்ற நிலையில் இருப்பதால் சமூகத்தில் மதிப்பு சுமாராகவே இருக்கும். வீண் விவாதங்களில் ஈடுபடுவதை தவிர்க்கவும். குடும்பத் தேவை பூர்த்தியாகும். புத்தாடை அணிகலன்கள் வாங்க வாய்ப்புண்டு. பிள்ளைகளால் மகிழ்ச்சியும், பெருமையும் கிடைக்கும். பொருளாதாரத்தில் படிப்படியான வளர்ச்சி உண்டாகும். பெண்களால் நன்மை கிடைக்கப் பெறுவீர்கள். குறிப்பாக செப்.10,11ல் அவர்கள் உதவிகரமாக இருப்பர். அக்.5,6,7ல் உறவினர்கள் வருகையும், அவர்களால் ஆதாயமும் கிடைக்கும். செப்.19,20ல்
உறவினர்கள் வகையில் சற்று ஒதுங்கி இருக்கவும். உடல் நலனில் கவனம் தேவை. சிறு இடர்பாடு வந்தாலும் உடனே சிகிச்சை மேற்கொள்வது நல்லது. செப்.21,22,30, அக்.1,2ல் சுதந்திரமற்ற நிலையில் இருப்பீர்கள்.

தொழில், வியாபாரம் வளர்ச்சி முகமாக அமையும். அரசிடம் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். செப்.19 க்கு பிறகு சுக்கிரன் சாதகமற்ற நிலையில் இருப்பதால் போட்டியாளரால் தொல்லை சந்திக்க வேண்டியதிருக்கும். அக்.4க்கு பிறகு நிலைமை சீராகும். செப்.23,24,25ல் எதிர்பாராத பணவரவு இருக்கும். கடும் போட்டியை சந்திக்க வேண்டிவரும். ஆனாலும் அதை சமாளித்து நிறுவனத்தை திறம்பட நடத்திச் செல்லும் ஆற்றல்  பிறக்கும். பங்குதாரர்களிடையே கருத்துவேறுபாடு ஏற்படலாம். அவர்கள் விஷயத்தில் பொறுமையை கையாள்வது நல்லது.

பணியாளர்கள் குருவின் பலத்தால் மேன்மை காண்பர். அதிகாரிகளின் ஆதரவால் நன்மை உண்டாகும். பதவி உயர்வு தானாக வந்து சேரும். அலுவலகத்தில் விண்ணப்பித்த கடன் உதவி எதிர்பார்த்ததை விட விரைவில் கிடைக்கும். சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பர். விரும்பிய இடத்துக்கு மாற்றம் பெறலாம். அக்.3,4ல் சிறப்பான பலனை காணலாம்.

கலைஞர்கள் செப். 19 க்கு பிறகு அதிக சிரத்தை எடுத்தே புதிய ஒப்பந்தங்களை பெறமுடியும். எதிர்பார்த்த புகழ், பாராட்டு கிடைக்காது. எதிரிகளால் தொல்லை, போட்டி அதிகமிருக்கும். அவப்பெயர் உருவாகலாம். அக்.4க்கு பிறகு பிரச்னை அனைத்தும் மறையும்.

அரசியல்வாதிகள் பலனை எதிர்பாராமல் உழைக்க வேண்டியது இருக்கும். ஆனால் செல்வாக்கிற்கு குறைவிருக்காது.

மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றம் காணலாம். போட்டி பந்தயங்களில் வெற்றி கிடைக்கும். ஆசிரியர்களின் அறிவுரையைப் பின்பற்றி வளர்ச்சி பெறுவீர்கள். செப்.29க்கு பிறகு சிரத்தை எடுத்து படிக்க வேண்டியதிருக்கும். கல்விச்சுற்றுலா சென்று வர வாய்ப்புண்டு.

விவசாயிகளுக்கு வருமானத்திற்கு குறைவிருக்காது. கால்நடை வளர்ப்பின் மூலம் எதிர்பார்த்த லாபம் கிடைக்கப் பெறுவீர்கள். வழக்கு, விவகாரத்தில் சாதகமான முடிவு கிடைக்கும். நவீன உழவுக் கருவிகள் வாங்கி சாகுபடியை அபிவிருத்தி செய்வது பற்றி ஆலோசிப்பீர்கள்.

பெண்கள் குடும்ப வாழ்வில் குதுõகலமாக இருப்பர். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். தோழிகள் மிக உறுதுணையாக இருப்பர். கணவரின் அன்பும், ஆதரவும் கிடைக்கப் பெறுவர். சிலருக்கு குழந்தை பாக்கியமும் கிடைக்கும். தடைபட்ட திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் கைகூடி வரும். செப்.17,18, அக்.14,15, 16ல் புத்தாடை அணிகலன்கள் வாங்கலாம். செப்.26,27ல் விருந்து, விழா என சென்று வருவீர்கள். அண்டை வீட்டார் அனுகூலமாக இருப்பர். அக்.4க்கு பிறகு அதிர்ஷ்டவசமாக பணவரவு கிடைக்கும். உங்களை புரிந்து கொள்ளாமல் இருந்தவர்கள் உங்கள் மேன்மை அறிந்து சரணடையும் நிலை வரலாம்.

நல்ல நாள்: உங்கள் ராசிக்கு செப். 17,18,23,24, 25,26,27, அக். 3,4,5,6,7,10,11,14,15,16 ஆகியவை நல்ல நாட்களாகும். இந்த நாட்களில் சுபநிகழ்ச்சிகளுக்குரிய ஏற்பாடு துவங்குதல், பயணம் செல்லுதல் ஆகியவற்றைச் செய்யலாம்.

கவன நாள்: ஒரு ராசிக்கு எட்டாமிடத்தில் சந்திரன் சஞ்சரிக்கும் காலம் தான் சந்திராஷ்டமம். அந்த வகையில் உங்கள் ராசிக்கு 8-ம் இடமான சிம்மம் ராசியில் சந்திரன் செப்.28,29 ல் இருப்பார். இந்த காலத்தில் வீண்விவாதங்களை தவிர்த்து இறை வழிபாட்டில் கவனம் செலுத்தவும். பண விஷயத்தில் விழிப்புடன் இருக்கவும்.

அதிர்ஷ்ட எண்: 2,4 நிறம்: மஞ்சள், சிவப்பு, பச்சை

பரிகாரம்:தினமும் காலையில் சூரியனை வணங்குங்கள். ஞாயிற்றுக்கிழமையில் ஏழைகளுக்கு கோதுமை தானம் கொடுக்கலாம். முருகப் பெருமானுக்கு பாலபிஷேகம் செய்து வழிபடுங்கள். ராகு, கேதுவுக்கு அர்ச்சனை செய்யுங்கள். துர்க்கை வழிபாடு மேற்கொள்வது நல்லது. நாக தேவதையை வணங்கி வாருங்கள்.

 
மேலும் சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை) »
temple news
அசுவினி: தைரிய பராக்கிரமக்காரகனான செவ்வாய், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்து கடவுளின் ... மேலும்
 
temple news
கார்த்திகை 2,3,4 ம் பாதம்: அதிர்ஷ்ட காரகனான சுக்கிரன், ஆற்றல் காரகனான சூரியனின் அம்சத்தில் பிறந்த ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்: வீரிய காரகனான செவ்வாய், புத்தி காரகனான புதனின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4 ம் பாதம்: மனக்காரகனான சந்திரன், அறிவுக்காரகனான குருபகவானின் அம்சத்தில் பிறந்திருக்கும் ... மேலும்
 
temple news
மகம்: ஆற்றல் காரகன், ஆன்ம காரகனான சூரியன், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்திருக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar