பொள்ளாச்சி மாரியம்மன் தேர்த்திருவிழாவில் பூவோடு ஏந்தி வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04மார் 2017 11:03
பொள்ளாச்சி: மாரியம்மன் கோவிலில், தேர்த்திருவிழாவில் இன்று கொடியேற்றுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. பொள்ளாச்சி கடைவீதியில் உள்ள மாரியம்மன் கோவிலில், தேர்த்திருவிழா கடந்த 14ம் தேதி நோன்பு சாட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. இதனைத்தொடர்ந்து, கடந்த 21ம் தேதி கம்பம் நடுதல் நிகழ்ச்சி நடந்தது. இதனைத்தொடர்ந்து, பக்தர்கள் தினசரி கம்பத்திற்கு புனித நீர் ஊற்றி வழிபாடு செய்தனர். இதுபோன்று, காலை மற்றும் மாலை நேரங்களில் சிறப்பு பூஜைகளும் நடக்கிறது. தொடர்ந்து, பக்தர்கள் பூவோடு எடுத்து, வேண்டுதலை நிறைவேற்றி அம்மனை வழிபடும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. பக்தர்கள் விரதமிருந்து ஒவ்வொரு பகுதியிலிருந்தும் கூட்டம்... கூட்டமாக பூவோடு எடுத்து வரும் நிகழ்ச்சி நடக்கிறது. நேற்று இரவு 11:00 மணிக்கு கிராமசாந்தி நிகழ்ச்சி நடந்தது. இன்று காலை 10:30 மணிக்கு கொடியேற்றமும், பூவோடு மற்றும் அலகு குத்தும் திருவிழா இன்று மாலை 6:00 மணிக்கு மார்க்கெட் ரோட்டில் நடைபெறுகிறது.