பதிவு செய்த நாள்
13
மார்
2017
02:03
கடமையுணர்வுடன் பணியாற்றும் கடக ராசி அன்பர்களே!
சுக்கிரன் மாதம் முழுவதும் நற்பலனை வாரி வழங்குவார். செவ்வாய் ஏப்.11ல் 11ம் இடத்திற்கு வருவது நல்ல அம்சமாகும். மற்ற கிரகங்கள் சாதகமற்ற இடத்தில் இருப்பதால் எந்த ஒரு செயலையும் முயற்சி எடுத்தே நிறைவேற்ற வேண்டியதிருக்கும். ஆனால் முயற்சிக்கு தகுந்த பலன் கிடைக்காமல் போகாது. செல்வாக்கு படிப்படியாக அதிகரிக்கும். சூரியன் சாதகமற்ற இடத்தில் இருப்பதால் சமூக மதிப்பு எதிர்பார்த்தபடி இருக்காது. புதனால் சிலர் பொல்லாப்பை சந்திக்க நேரிடலாம். வீண் விவாதங்களில் ஈடுபடாமல் இருப்பது அவசியம். ஏப்.11க்கு பிறகு செவ்வாயால் முயற்சியில் வெற்றி உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். சுக்கிரனால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைத்திருக்கும். பொருளாதார வளம் அதிகரிக்கும். தேவையான ஆடம்பர வசதிகள் கிடைக்கும். பெண்கள் மிகவும் அனுகூலமாக இருப்பர். குறிப்பாக ஏப்.5,6ல் அவர்களால் நன்மை கிடைக்கும். விருந்து விழா என சென்று வருவீர்கள். ஏப்.1,2ல் உறவினர்கள் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். ஆனால் அவர்கள் வகையில் மார்ச் 15,16,17, ஏப்.12,13ல் கருத்துவேறுபாடு வர வாய்ப்பு உண்டு. ஏப்.11க்கு பிறகு குடும்ப பிரச்னை அடியோடு மறைந்து நன்மை அதிகரிக்கும். புதிய வீடுமனை வாகனம் வாங்க யோகம் உண்டாகும். உடல்நலத்தில் கவனம் தேவை. உஷ்ணம், தோல், கண் தொடர்பான நோய் முதலியன ஏப்.11க்கு பிறகு மறையும். பயணத்தின் போது விழிப்புடன் இருப்பது அவசியம்.
தொழில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் வளர்ச்சி பெறும். மாத பிற்பகுதியில் போட்டியாளர்கள் தொல்லை இருக்கும் இடம் தெரியாமல் மறையும். ஏப்.3,4,7,8ல் சந்திரனால் சிறு தடைகள் குறுக்கிடலாம். ஆனால் மார்ச் 20,21,22ல் எதிர்பாராத வகையில் வருமானம் கிடைக்கும். பகைவர்களை எதிர்த்து வெற்றிக் கொள்ளும் ஆற்றல் பிறக்கும்.
பணியாளர்கள் சிரத்தை எடுத்து உழைக்க வேண்டியது இருக்கும். வேலையில்
பொறுமையும் நிதானமும் தேவை. சக பெண் ஊழியர்கள் ஆதரவுடன் செயல்படுவர். நெருப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் சற்று கவனமாக இருப்பது நல்லது. மார்ச் 30,31 ஆகிய நாட்கள் சிறப்பானதாக அமையும். ஏப்.11க்கு பிறகு பணியாளர்கள் சிறப்பான முன்னேற்றத்தைக் காணலாம். அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கப் பெறுவர்.
கலைஞர்கள் பின்தங்கிய நிலையில் இருந்து மீள்வர். தடைபட்ட ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகும். ரசிகர்களின் மத்தியில் புகழ், செல்வாக்கு அதிகரிக்கும். சிலருக்கு அரசாங்க வகையில் விருது கிடைக்க வாய்ப்பு உண்டு. பெண் கலைஞர்கள் ஆதரவுடன் இருப்பர்.
அரசியல்வாதிகள் தொண்டர்களின் மத்தியில் நற்பெயர் காண்பர். ஏப்.11க்கு பிறகு
எதிர்பார்த்த புதிய பதவி தேடி வரும். அரசியல் ரீதியான பயணம் வெற்றியில் முடியும்.
மாணவர்கள் மெத்தனமாக இருக்க வேண்டாம். சிரத்தை எடுத்து படித்தால் மட்டுமே நற்பலன் கிடைக்கும். நண்பர் விஷயத்தில் விழிப்புடன் இருப்பது நல்லது.
விவசாயிகள் போதிய மகசூல் கிடைக்கப் பெறுவர். ஆனால், கடின உழைப்பும், விடாமுயற்சியும் தேவைப்படும். கால்நடை மூலம் எதிர்பார்த்த வருமானம் கிடைக்கும். ஏப்.11க்கு பிறகு புதிய சொத்து வாங்கும் எண்ணம் கைகூடும்.
பெண்கள் குடும்ப வாழ்வில் குதுõகலம் காண்பர். கணவன் மற்றும் குடும்பத்தாரிடம் நன்மதிப்பை பெற்று மகிழ்வர். பணிபுரியும் பெண்களுக்கு சக ஊழியர்கள் மத்தியில் வீண் விரோதம் உருவாக வாய்ப்புண்டு. மார்ச் 14, ஏப்.9,10,11ல் புத்தாடை, அணிகலன்கள் வாங்கலாம். பிறந்த வீட்டில் இருந்து உதவி கிடைக்க பெறலாம். மார்ச் 23,24 ஆகிய நாட்கள் சிறப்பானதாக அமையும். சகோதரர் ஆதரவுடன் செயல்படுவர். விருந்து, விழா என சென்று வருவீர்கள். அக்கம் பக்கத்தினர் தொல்லை ஏப். 11 க்கு பிறகு மறையும். பெண் காவலர்களுக்கு புதிய பதவி தேடி வரும்.
நல்ல நாள்: மார்ச் 14,20,21,22,23,24,30,31.ஏப்.1,2,5,6,9,10,11
கவன நாள்: மார்ச் 25,26 சந்திராஷ்டமம்
அதிர்ஷ்ட எண்: 4,8 நிறம்: வெள்ளை, சிவப்பு
பரிகாரம்: நவக்கிரக வழிபாடு நன்மையளிக்கும். சனிக்கிழமை பெருமாள் கோவிலுக்கு செல்வது நல்லது. ஆஞ்ச நேயர் வழிபாட்டால் வாழ்வில் முன்னேற்றம் உண்டாகும். புதன்கிழமையில் புதன் பகவானுக்கு பச்சை வஸ்திரம் சாத்தி வணங்கலாம். பசுவுக்கு பசுந்தழை கொடுக்கலாம். தினமும் காலையில் சூரியதரிசனம் செய்வது அவசியம்.