Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கடகம்: (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்) ... கன்னி: (உத்திரம் 2,3,4, அஸ்தம், சித்திரை 1,2) ஆன்மிக சுற்றுலா கன்னி: (உத்திரம் 2,3,4, அஸ்தம், சித்திரை 1,2) ...
முதல் பக்கம் » ஆனி ராசி பலன் (15.6.2025 முதல் 16.7.2025 வரை)
சிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1) தொட்டது பொன்னாகும்
எழுத்தின் அளவு:
சிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1) தொட்டது பொன்னாகும்

பதிவு செய்த நாள்

13 மார்
2017
02:03

உழைப்பில் உறுதி மிக்க சிம்ம ராசி அன்பர்களே!

நீங்கள் தொட்டதெல்லாம் பொன்னாகும் சிறப்பான காலமாக அமையும். சுக்கிரன்,  புதன் இணைந்து நன்மையை வாரி வழங்குவர். ராசிக்கு 2ம் இடத்தில் உள்ள குருவால் முயற்சியில் வெற்றி உண்டாகும். மனதில் தைரியம் பிறக்கும். கையில் பணப்புழக்கம் அதிகரிக்கும். பகைவர் சரணடையும் சூழ்நிலை ஏற்படும். புதன் 8ம் இடத்தில் இருந்து குடும்ப நிலையை மேம்படுத்துவார். முயற்சியில் இருந்த தடை அனைத்தும் விலகும். பொருளாதார வளம் பெருகும். மதிப்பு மரியாதை  சுமாராகவே இருக்கும். சுக்கிரன் சாதகமான இடத்தில் இருப்பதால் வசதி வாய்ப்பு பெருகும். பெண்கள் ஆதரவுடன் செயல்படுவர். குடும்பத்தில் குதுõகலமான சம்பவங்கள் நடந்தேறும். புத்தாடை அணிகலன்கள் வாங்கலாம். பிள்ளைகளால் மகிழ்ச்சியும், பெருமையும் கிடைக்கும். கணவன், மனைவி இடையே அன்னியோன்ய சூழ்நிலை உருவாகும். சகோதரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். குறிப்பாக ஏப்.7,8ல் அவர்கள் மிகவும் உதவிகரமாக செயல்படுவர். விருந்து, விழா என சென்று வருவீர்கள். மார்ச் 18,19ந் தேதிகளில் உறவினர்கள் வகையில் கருத்துவேறுபாடு ஏற்பட வாய்ப்பு உண்டு. அதே நேரத்தில்  ஏப். 3,4ல் உறவினர்கள் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். ஏப்.11 க்கு பிறகு அக்கம் பக்கத்தினர் தொல்லை ஏற்படலாம். செவ்வாயால் உடல்நிலை அதிருப்தி அளிக்கலாம். பயணத்தின் போது சற்று கவனம் தேவை.

தொழில், வியாபாரத்தில்  லாபத்திற்கு குறைவிருக்காது. வளர்ச்சிப் பாதையில் கால் பதித்து முன்னேறிச் செல்வீர்கள். உங்களை எதிர்த்தவர்கள் இருந்த இடம் தெரியாமல் மறைவர். புதிய வியாபார முயற்சி அனுகூலம்  தரும். ஆனால் அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் நல்ல முன்னேற்றம் அடையும்.  அரசு வகையில் அனுகூலமான போக்கு காணப்படவில்லை. எனவே வரவு செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும். மார்ச் 14, ஏப்.5,6,9,10, 11ல் சந்திரனால் சிறு தடைகள் ஏற்படலாம். ஏப்.23,24ல் எதிர்பாராத வகையில் பணம் வரும்.

பணியாளர்கள்  புதன், குருவின் பலத்தால் சிறப்பான நிலையில் இருப்பர்.   பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கப் பெறுவர். பணியிடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். வேலையில் உங்கள் திறமை பளிச்சிடும். மேல் அதிகாரிகளின் ஆதரவும், சக பெண் ஊழியர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும். எதிர்பார்த்த கோரிக்கை விரைவில் நிறைவேறும். அரசு ஊழியர்கள் பணியில் சற்று  கவனமாக இருக்கவும். ஏப்.1,2 ஆகிய நாட்கள் சிறப்பானதாக அமையும்.

கலைஞர்கள் சிறப்பான பலனைக் காணலாம். புதிய ஒப்பந்தம் எளிதாக  கிடைக்கப் பெறுவர். சக பெண் கலைஞர்கள் ஆதரவுடன் செயல்படுவர்.

அரசியல்வாதிகளுக்கு சுமாரான பலன் கிடைக்கும். எதிர்பார்த்த பதவி கிடைப்பதில் தாமதம் உண்டாகும்.  மார்ச் 20,21,22ல் மனக்குழப்பம் ஏற்படலாம்.

மாணவர்கள் முன்னேற்றத்துடன் காணப்படுவர். போட்டி பந்தயங்களில் வெற்றி கிடைக்கும். ஆசிரியர்களின் மத்தியில் நற்பெயர் உண்டாகும். பெற்றோரின் வழிகாட்டுதல் பயன் உள்ளதாக அமையும்.

விவசாயிகள் நல்ல பொருளாதார வளத்தைக் காண்பர்.  கிழங்கு, காய்கறி, பழவகைகள் ஆகியவற்றின் மூலம் நல்ல மகசூல் கிடைக்கும். புதிய சொத்து வாங்குவதற்கான வாய்ப்பு தள்ளிப் போகும். வழக்கு விவகாரத்தில் ஒதுங்கி இருப்பது நல்லது.

பெண்கள் சிறப்பான நிலையில் இருப்பர். கணவன் மற்றும் குடும்பத்தாரிடம் நற்பெயர் கிடைக்கும். பிள்ளைகளின் செயல்பாட்டால் மனதில் மகிழ்ச்சியும்,  பெருமையும் ஏற்படும். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பானப் பலனை பெறுவர். அதிகாரிகளின் ஆதரவு நல்ல முறையில்  கிடைக்கும். பதவி உயர்வு தானாக வந்து சேரும். மார்ச் 15,16,17, ஏப். 12,13 ல் புத்தாடை, நகைகள் வாங்கலாம். பெற்றோர் வீட்டில் இருந்து  உதவி கிடைக்கப்  பெறலாம். மார்ச் 25,26 ஆகியவை சிறப்பான நாட்களாக அமையும். சகோதரிகளால் நன்மை ஏற்படும். அக்கம் பக்கத்தினரின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

நல்ல நாள் : மார்ச் 15,16,17,23,24,25,26, ஏப்.1,2,3,4,7,8,12,13

கவன நாள்: மார்ச் 27,28,29 சந்திராஷ்டமம்

அதிர்ஷ்ட எண்: 5,7  நிறம்: பச்சை, வெள்ளை

பரிகாரம்: செவ்வாய்க் கிழமை முருகனை வழிபட்டால் நன்மை உண்டாகும். தினமும் காலையில் சூரிய தரிசனம் செய்யுங்கள். சனிக்கிழமை ஆஞ்சநேயரை வழிபடுங்கள். சதுர்த்தியன்று விநாயகர் கோவிலுக்கு சென்று வாருங்கள். ஆதரவற்றோருக்கு இயன்ற உதவி செய்யுங்கள். ராகு, கேதுவுக்கு அர்ச்சனை செய்யுங்கள். பசுவுக்கு பழம், கீரை கொடுங்கள்.

 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar