பதிவு செய்த நாள்
25
மார்
2017
12:03
கரூர்: கரூர் மாரியம்மன் கோவில் உண்டியலில், பக்தர்கள் செலுத்திய காணிக்கையாக, ஒன்பது லட்சத்து, 92 ஆயிரத்து, 273 ரூபாய் கிடைத்தது. கரூர் மாரியம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்கள், அங்கு வைக்கப்பட்டுள்ள நான்கு உண்டியல்களில் பணம், தங்கம், வெள்ளி காணிக்கை அளிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். நேற்று நான்கு உண்டியல்களும் இந்து அறநிலையத்துறை உதவி கமிஷனர் ஜெயப்பிரியா முன்னிலையில் திறக்கப்பட்டது. கோவில் பணியாளர்கள் மற்றும் சேவார்த்திகள் உட்பட, 60 பேர் பணம் மற்றும் நாணயங்கள் எண்ணும் பணியில் ஈடுபட்டனர். நேற்று காலை, 10:00 மணிக்கு துவங்கிய பணி மதியம், 2:00 மணியளவில் நிறைவடைந்தது. முடிவில், தங்கம், வெள்ளி, பணம், நாணயங்கள் அனைத்தும் மொத்த மதிப்பாக, ஒன்பது லட்சத்து, 92 ஆயிரத்து, 273 ரூபாய் பக்தர்களால் செலுத்தப்பட்டிருந்தது.