ப.வேலூர்: ப.வேலூரில் மாரியம்மன் திருவிழா கடந்த 19ல் கம்பம் நடப்பட்டு விழா தொடங்கியது. விழாவின் 6ம் நாளான நேற்று பூச்சொரிதல் விழா நடைபெற்றது. இதில் பக்தர்கள் பல்வேறு வகையான மலர்களை கொண்டு அம்மனை அலங்கரித்து வழிபட்டனர். அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.