திருப்பதியில் ஏப்.,7 முதல் வி.ஐ.பி., தரிசனம் ரத்து
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29மார் 2017 10:03
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஏப்.,7 முதல் 10 வாரங்களுக்கு வி.ஐ.பி., தரிசனம் ரத்து செய்யப்படுவதாக, திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. எம்.பி., எம்.எல்.ஏ., அமைச்சர்கள் வழங்கும் சிபாரிசு கடித்த்துக்கான வி.ஐ.பி., தரிசனம் ரத்து செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கோடை காலத்தையொட்டி பக்தர்களின் வருகை அதிகமாக இருக்கும் என்பதால் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.