ஸ்ரீவில்லிபுத்தூர் சந்தனமாரியம்மன் பூக்குழிவிழா திரளான பக்தர்கள் தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27ஏப் 2017 12:04
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் சந்தனமாரியம்மன் கோயிலில் நடந்த பூக்குழித் திருவிழாவில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ மிதித்தனர்.
கடந்த 15ல் கொடியேற்றத்துடன் துவங்கிய இப்பூக்குழி விழாவின் 12ம் நாளான நேற்று காலை முதல் திரளான பக்தர்கள் கோயிலில் காப்புகட்டி நகரின் ரத வீதிகளில் வலம் வந்தனர். மதியம் அம்மன் வீதியுலா துவங்கியபின், மாலை 4:45 மணிக்கு பக்தர்கள் பூக்குழி இறங்க துவங்கினர். ஏராளமான ஆண்கள் மற்றும் பெண்கள் தங்களது குழந்தைகளுடன் பூக்குழி இறங்கியது பார்ப்பவர்களை மெய்சிலிர்க்க வைத்தது. 2 மணி நேரத்திற்கும் மேல் நடந்த இந்நிகழ்ச்சியில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ மிதித்தனர்.இதையொட்டி பல்வேறு பொதுநல அமைப்பினர் தண்ணீர் பந்தல் அமைத்து நீர் ஆகார ஏற்பாடுகளை ரெங்கநாதபுரம், திருமலாபுரம் யாதவர் உறவின்முறை விழாக்கமிட்டியினர் செய்திருந்தனர். இன்று பகல் 12:00 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது.