பதிவு செய்த நாள்
27
ஏப்
2017
11:04
சிதம்பரம்: சிதம்பரம் தில்லை காளியம்மன் கோவிலில் நடந்த அமாவாசை அர்த்தஜாம சிறப்பு பூஜையையொட்டி அம்மன் வென்பட்டு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
பிரசித்திப் பெற்ற சிதம்பரம் தில்லைக்காளி அம்மன் கோவிலில் அமாவாசை அர்த்தஜாம அபிேஷக மண்டலி சார்பில் சித்திரை மாத அமாவாசையையொட்டி 192வது சிறப்பு அர்த்தஜாம பூஜை, மகா அபிஷேகம் நடந்தது. இதனையொட்டி விநாயகர் மற்றும் பிரம்மசாமுண்டி அம்மனுக்கு நெய் தீபம் வழிப்பாடும், தில்லைக்காளி அம்மனுக்கு குடம் நல்லெண்ணெய் அபிஷேகம், தைலக் காப்பு நடந்தது. இதனைதொடர்ந்து பால், தயிர், மற்றும் குளிர்ச்சியான பொருள்கள், வாசனை திரவியங்கள் போன்ற ஏராளமான பொருள்களால் மகா அபிஷேகம் நடந்தது. பின்னர் தில்லைக்காளியம்மனுக்கு வெண்பட்டு சாற்றி, வெட்டிவேர், விளாமுச்சி வேர், செவ்வரளி பூ ஆகியவைகளால் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். பின்னர் அம்மனுக்கு அம்மாவாசை சிறப்பு அர்த்தஜாம பூஜைகள், மகா தீபாராதனைகள் நடந்தது. இதில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கனக்கான பக்தர்கள் வழிப்பட்டு தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. பூஜை ஏற்பாடுகளை தூபதர்மஜ் வைத்தி, மண்டலி நிர்வாகிகள் செய்தனர்.