பதிவு செய்த நாள்
27
ஏப்
2017
12:04
வத்திராயிருப்பு: வத்திராயிருப்பில் மழைவேண்டியும், உலக நன்மைக்காகவும் நடந்த குருபூஜை விழாவில் வனபோஜனம் நடந்தது.வத்திராயிருப்பு பகுதியை சேர்ந்த சைவ வேளாளர் சமுதாயத்தின் சார்பில் சித்திரை மாத அமாவாசை தினத்தில் ஆண்டுதோறும் குருபூஜை விழா நடைபெறும். இதில் உலக நன்மைக்காக சிறப்பு வழிபாடு நடத்தப்படும். இந்த ஆண்டுக்கான குருபூஜை விழா சதுரகிரி மலையடிவாரமான மந்தித்தோப்பு பகுதியில் நடந்தது. சதுரகிரி சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்க சுவாமிகளுக்கு அன்னப்படையல் இடப்பட்டது. பழனிச்சாமி ஓதுவார் தலைமையில் தேவாரம், திருவாசகம், பஞ்சபுராண பாராயண வழிபாடு நடத்தப்பட்டது. மழைவேண்டியும், உலக நன்மைக்காகவும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.
இதை தொடர்ந்து நடந்த வனபோஜனத்தில், பூஜிக்கப்பட்ட அன்னப்படையல் பக்தர்களுக்கு அன்னதானமாக வழங்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் பூஜைகளில் கலந்து கொண்டு வழிப்பட்டனர். ஏற்பாடுகளை சமுதாய தலைவர் அம்மையப்பன், செயலாளர் கண்ணன், பொருளாளர் முத்துக்குமார், மூத்த நிர்வாகிகள் மகாலிங்கம், பிச்சைராமன், விஸ்வநாதன், மீனாட்சிசுந்தரம் செய்தனர்.