கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு சூலக்கல் மாரியம்மன் கோவிலில் வெள்ளிக்கிழமையை யொட்டி மாரியம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. சூலக்கல் மாரியம்மன் கோவில் மிகவும் பழமையானது. இக்கோவிலில் வெள்ளி, செவ்வாய், அமாவாசை, பவுர்ணமி நாட்களில் சிறப்பு அபிேஷகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடப்பது வழக்கம். நேற்று காலை, 7:30 மணிக்கு, 30 வகையான பொருட்களால் மாரியம்மனுக்கு அபிேஷக பூஜை நடந்தது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து தீபாராதனை காட்டப்பட்டது. இதில், சூலக்கல் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பின், காலை, 8:30 மணி முதல் இரவு, 7:30 மணி வரை பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை செயல் அலுவலர் மற்றும் பூசாரிகள் செய்தனர்.