ஜகாத் எனப்படும் தானம் மிகவும் முக்கியமானது. “ஜகாத்துக்குரிய பங்கு கலந்திருக்கும் பொருளில் இருந்து, அதை தானம் செய்யாத பட்சத்தில் அது அசல் பொருளையே அழித்து விடும்,” என்கிறார் நபிகள் நாயகம். பெரிய முதலீட்டில் தொழில் நடத்தி, ஏராளமான லாபம் சம்பாதிக்கும் போது, தானத்திற்குரிய பொருளை ஒதுக்கி வைத்து விட வேண்டும். “ஒருவனுக்கு அல்லாஹ் பொருள் வசதி அளித்திருந்தும், அவன் அதற்குரிய ஜகாத்தை கொடுக்காவிட்டால்,அப்பொருள் மறுமைநாளில் கொடிய நச்சுத்தன்மை உடைய பாம்பாக மாறும். அதன் தலையில் இரு கரும்புள்ளிகள் காணப்படும். அப்பாம்பு கழுத்தில் வளையமாக சுற்றப்படும். அவனின் இருதாடைகளையும் பிடித்துக் கொண்டு, நான் தான் உன்னுடைய பொருள், நான் தான் உன்னுடைய செல்வக்களஞ்சியம் என்று சொல்லும், என்கிறார் நாயகம். தானம் செய்யாவிட்டால், தண்டனையும் உண்டு என்பது இதிலிருந்து தெளிவாகிறது.