ஒரு ஆராய்ச்சியாளர் பல ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த பக்திமானின் சந்ததி, கெட்ட வழியில் பொருள் சேர்த்து கோடீஸ்வரரான ஒருவரது சந்ததி பற்றி ஆய்வு நடத்தினார். பக்திமானின் சந்ததிகள் நல்ல வேலையில் இருந்தனர். கல்வியில் சிறந்து விளங்கினர். கோடீஸ்வரரின் வம்சத்தினரில் சிலர் ஊனமுற்றும், சிலர் மனநிலை பாதிக்கப்பட்டவர்களாகவும், சிலர் ஜெயிலிலும் இருந்தனர். * நீதிமானின் சந்ததி பூமியில் பலத்திருக்கும்; செம்மையானவர்களின் வம்சம் ஆசிர்வதிக்கப்படும். * நான் இளைஞனாயிருந்தேன். முதிர் வயது உள்ளவனுமானேன். ஆனாலும், நீதிமான் கைவிடப்பட்டதையும், அவன் சந்ததி அப்பத்துக்கு பிச்சை எடுப்பதையும் நான் காணவில்லை. * நீதிமான் பனையைப் போல் செழித்து வளருவான் என்ற வசனங்கள் இதை உறுதிப்படுத்துகின்றன. நல்லவனாய் வாழ்வது நமக்காக மட்டுமல்ல, நம் சந்ததிக்காவும் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.