பதிவு செய்த நாள்
13
ஜூன்
2017
03:06
திட்டமிட்டு வாழ்வு நடத்தும் விருச்சிக ராசி அன்பர்களே!
உங்கள் ராசிக்கு 11-ம் இடத்தில் இருக்கும் குருவால் நன்மை உண்டாகும். 8-ம் இடத்தில் இருக்கும் புதன் ஜூன் 28-ந் தேதி வரை நன்மை தர காத்திருக்கிறார். அதன் பின் அவர் கடகத்திற்கு வருவதால் நன்மை சற்று குறையும். குரு பகவானால் பொருளாதாரம் மேம்படும். பணியாளர்களுக்கு புதிய பதவி கிடைக்கும். குடும்ப வாழ்வில் குதூகலம் நிறைந்திருக்கும். புதனால் பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். மனதில் மகிழ்ச்சி நிலைத்திருக்கும். பெண்கள் மிக உறுதுணையாக செயல்படுவர். பிரிந்த குடும்பம் மீண்டும் ஒன்று சேரும்.
புதுமணத் தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் ஏற்படும். புதிய முயற்சியில் வெற்றி உண்டாகும். புத்தாடை, அணிகலன்கள் வாங்கலாம். பிள்ளைகளின் செயல்பாட்டால் பெருமை கொள்வீர்கள். ஜூன் 28-க்கு பிறகு மனவேதனை ஏற்படலாம். எதிலும் பொறுமையைக் கடைபிடிப்பது நல்லது. விட்டுக் கொடுத்து போகவும். அறிமுகம் இல்லாதவர்களிடம் எச்சரிக்கையுடன் பழகவும்.
ஜூலை 5, 6, 7-ல் பெண்கள் உதவிகரமாக செயல்படுவர். ஜூன் 30, ஜூலை 1,2 ல் உறவினர்கள் வருகையும், அவர்கள் மூலம் நன்மையும் உண்டாகும். ஆனால் ஜூலை 10, 11-ல் அவர்கள் வகையில் கருத்துவேறுபாடு உருவாகலாம். சற்று ஒதுங்கி இருக்கவும். ஜூலை 8, 9-ல் புத்தாடை, நகை வாங்க யோகமுண்டு. உடல்நிலை சுமாராக இருக்கும். செவ்வாயால் உஷ்ண, பித்தம், மயக்கம், சளி போன்ற உபாதை வரலாம். ஜூன் 17, 18, 19, 26, 27, ஜூலை 15, 16-ல் வயிறு தொடர்பான பிரச்னை வரலாம். அலைச்சலால் உடல் அசதிக்கு ஆளாகலாம்.
தொழில், வியாபாரத்தில் கடினமாக உழைக்க வேண்டியதிருக்கும். லாபம் சீராக இருக்கும். அரசாங்க வகையில் அனுகூலமான போக்கு காணப்படவில்லை. எனவே வரவு-, செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும். எதிரிகள் மீது ஒரு கண் வைத்திருப்பது நல்லது. தொழில் ரீதியான பயணம் அடிக்கடி செல்ல நேரிடும். ஜூலை 3, 4, 8, 9- ல் சந்திரனால் சிறு தடைகள் ஏற்படலாம்.
ஜூன் 20, 21-ல் எதிர்பாராத வகையில் பணம் கிடைக்கப் பெறுவர். பணியாளர்கள் பணியிடத்தில் மதிப்புடன் நடத்தப்படுவர். சிலருக்கு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புண்டு. அதிகாரிகளின் கருணை பார்வை கிடைக்கும். எதிர்பார்த்த கோரிக்கை ஒவ்வொன்றாக நிறைவேறும். ஜூன் 28-க்கு பிறகு திறமைக்கு ஏற்ற பொறுப்பு கிடைக்காமல் போகலாம். சிலருக்கு விரும்பாத இடமாற்றம் கிடைக்கலாம். அரசு ஊழியர்கள் வேலையில் அதிக கவனமுடன் இருக்கவும். பணி தவிர்த்த பிற விஷயங்களில் ஈடுபட வேண்டாம். ஜூன் 28, 29 ல் எதிர்பாராத நன்மை உண்டாகும்.
கலைஞர்கள் மறைமுகப் போட்டியைச் சந்திப்பர். விடாமுயற்சி இருந்தால் மட்டுமே புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். எதிர்பார்த்த புகழ், பாராட்டு கிடைக்காது. அரசியல்வாதிகள் சீரான நிலையில் காணப்படுவர். தொண்டர்களின் நலனுக்காக பணம் செலவழிக்க நேரிடும். தலைமையின் கருத்துக்கு மதிப்பளிப்பது நல்லது.
மாணவர்களுக்கு ஜூன் 28 வரை புதன் சாதகமாக இருப்பதால் கல்வியில் வளர்ச்சி உண்டாகும். அதன் பின் விடாமுயற்சி தேவைப்படும்.
ஆசிரியர்களின் வழிகாட்டுதலை ஏற்பது முன்னேற்றம் தரும். போட்டியில் வெற்றி பெற கடின உழைப்பு தேவைப்படும்.
விவசாயிகள் மானாவாரி பயிர்கள் மூலம் நல்ல மகசூல் காண்பர். கால்நடை வளர்ப்பின் மூலம் வருமானம் அதிகரிக்கும். புதிய சொத்து வாங்க சில காலம் பொறுத்திருக்க நேரிடும். புதிய வம்பு, வழக்குகளில் சிக்க வேண்டாம். நிலப்பிரச்னையைப் பேசித் தீர்ப்பது நல்லது.
பெண்களால் குடும்பம் சிறந்து விளங்கும். கணவர் மற்றும் குடும்பத்தாரிடம் விட்டுக் கொடுத்து போகவும். பிள்ளைகளின் வளர்ச்சிக்காக பாடுபடுவர். தொழில் புரியும் பெண்கள் சுமாரான லாபம் கிடைக்கப் பெறுவர். பணிக்குச் செல்லும் பெண்களுக்கு எதிர்பார்த்த சலுகை தாமதமின்றி கிடைக்கும். சிலருக்கு இட,பணிமாற்றம் ஏற்பட வாய்ப்புண்டு. ஜூன் 22, 23 ல் எதிர்பார்ப்பு இனிதே நிறைவேறும். பிறந்த வீட்டில் இருந்து சீதனப் பொருள் கிடைக்க பெறலாம்.
நல்ல நாள்: ஜூன் 20,21,22,23,28,29,30, ஜூலை 1,2,5, 6, 7, 10, 11
கவன நாள்: ஜூன் 24, 25 சந்திராஷ்டமம்
அதிர்ஷ்ட எண்-: 4,7 நிறம்: பச்சை, நீலம்
பரிகாரம்
* சனியன்று ஆஞ்சநேயருக்கு துளசி அர்ச்சனை
* வெள்ளியன்று மகாலட்சுமிக்கு நெய்தீபம்
* புதன்கிழமையில் பசுவுக்கு கீரை கொடுத்தல்