துலாம்: (சித்திரை 3,4, சுவாதி, விசாகம் 1,2,3).. பிள்ளைகளால் பெருமை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13ஜூன் 2017 03:06
இனிய எண்ணம் கொண்ட துலாம் ராசி அன்பர்களே!
இந்த மாதம் பிற்பகுதியில் அதிக நன்மைகள் கிடைக்க வாய்ப்புள்ளது. ராகு 11-ம் இடத்தில்நின்று நன்மை தருவார். புதன் ஜூன் 29-க்கு பிறகு சாதகமாக இருந்து சிறப்பான பலனை தருவார். மற்ற கிரகங்கள் திருப்தியற்ற நிலையில் உள்ளன. எந்தச் செயலையும் சற்று முயற்சி எடுத்தே நிறைவேற்ற வேண்டியிருக்கும். கடவுளின் கருணை கிடைக்கும்.
ராகு தன் பலத்தால் முயற்சிகளில் வெற்றியை தருவார். பகைவர்களின் சதியை முறியடிக்கும் வல்லமையை பெற்று இருக்கிறீர்கள். உங்கள் ஆற்றல் மேம்பட்டு இருக்கும். புதன் ஜூன் 29- வரை 9-ம் இடத்தில் நிலை கொண்டிருப்பதால் சிலர் பொல்லாப்பை சந்திக்க நேரிடலாம். பொறுமையும், விட்டுக் கொடுத்து போவதும் நன்மை தரும். சிலர் சகவாச தோஷத்தால் பணத்தை விரயமாக்குவர்.
குரு 12-ம் இடத்தில் இருப்பதால் பொருள் நஷ்டம் ஏற்படலாம். பல்வேறு தொல்லைகள் உருவாகும்.
உங்கள் செல்வாக்கு வெளியே எப்படி இருந்தாலும் வீட்டில் தனி அந்தஸ்துடன் இருப்பீர்கள். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். புத்தாடை, நகை வாங்கலாம். பிள்ளைகளால் மகிழ்ச்சியும் பெருமையும் கிடைக்கும். கணவன், -மனைவி இடையே அன்பு மேம்படும். ஜூன் 29-க்கு பிறகு பணவரவு அதிகமாக இருக்கும். சொந்தபந்தங்கள் வருகையால் செலவும் உண்டு. வீட்டிலும், அலுவலகத்திலும் பெண்கள் மிகவும் உதவிகரமாக இருப்பர். குறிப்பாக ஜூன் 3,4ல் அவர்களால் அதிக நன்மை ஏற்படும். ஜூன் 28, 29-ல் உறவினர்களின் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். ஆனால் ஜூன் 10,11-ல் அவர்கள் வகையில் சற்று ஒதுங்கி இருக்கவும். ஜூலை 13-க்கு பிறகு சிலரது வீட்டில் பொருட்கள் களவு போக வாய்ப்பு உண்டு. பயணத்தின் போது கவனம் தேவை.
தொழில், வியாபாரத்தில் மாதபிற்பகுதியில் நல்ல வளர்ச்சி காணலாம். இருப்பினும் போட்டி அதிகரிக்கும். ஜூன் 29-க்கு பிறகு போட்டியாளர்களின் இடையூறுகளை உடைத்தெறிவீர்கள். புதிய வியாபாரம் ஓரளவு அனுகூலம் தரும். ஜூன் 15,16,30, ஜூலை 1,2,12,13,14-ல் சந்திரனால் தடைகள் வரலாம். சிலருக்கு தொழில், வணிகர் சங்கங்களில் பதவி, புகழ், பாராட்டு கிடைக்கும்.
பணியாளர்கள் அதிகமாக உழைக்க வேண்டியிருக்கும். மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். ஜூன் 26, 27, 28, 29, 30, ஜூலை 1,2-ல் உன்னதமான பலன் நடக்க ஜூன் 29-க்கு பிறகும். ஜூலை13-க்கு பிறகும் சிறப்பான நிலையை அடைவர். சகவாச தோஷத்தால் பணத்தை வீணாக்கியவர்கள், அதில் இருந்து விடுபடுவர்
அரசியல்வாதிகள் பலனை எதிர்பாராமல் உழைக்க வேண்டியது இருக்கும். பதவி கிடைக்குமென நினைத்தவர்களுக்கு அது கிடைக்காமல் போவது வருத்தத்தைத் தரும்.
மாணவர்கள் நண்பர்களுடன் வெளியில் செல்லும் போது, சட்டத்துக்கு உட்பட்டு நடக்க வேண்டும். இல்லாவிட்டால் தேவையற்ற கெட்ட பெயர் எடுக்க வாய்ப்பு உண்டு. இந்த விஷயத்தில் பெற்றவர்கள் அவர்களை வழிநடத்துவது நல்லது. போட்டிகளில் வெற்றி காணலாம். விவசாயிகள் நல்ல வருமானம் பெறுவர். பழம், பயறு வகை மூலம் அதிக லாபம் கிடைக்கும். புதிய சொத்து வாங்க சில காலம் பொறுத்திருக்க வேண்டும். கால்நடை வகையில் எதிர்பார்த்த பலன் கிடைப்பது அரிது. வழக்கு, விவகாரங்கள் சுமாராக இருக்கும்.
பெண்கள் ராகுவால் சிறப்பான நிலையில் இருப்பர். பிள்ளைகளால் மகிழ்ச்சியும் பெருமையும் கிடைக்கும். வெளியூர் வாசம் இருக்கும். ஜூன் 28- வரை குடும்பத்தாரிடம் பொறுமையுடன், விட்டுக் கொடுத்து போகவும். வேலைக்கு செல்லும் பெண்கள் அதிகமாக உழைக்க வேண்டியது இருக்கும் உங்கள் பொறுப்புகளை யாரிடமும் ஒப்படைக்க வேண்டாம். உங்கள் செல்வாக்குக்கு பாதிப்பு ஏற்படலாம். சற்று ஒதுங்கி இருக்கவும். ஜூலை 8, 9-ல் புத்தாடை, நகைகள் வாங்கலாம். பெற்றோர் வீட்டில் இருந்து பொருட்கள் வரப்பெறலாம்.
ஜூன் 20, 21-ந் தேதிகளும் சிறப்பான நாட்களாக அமையும். விருந்து, விழா என சென்று வருவீர்கள். சகோதரர்கள் மூலம் பண உதவி கிடைக்கும். செவ்வாயால் அண்டை வீட்டார்களின் தொல்லை ஏற்படும். சிலரது வீட்டில் பொருட்கள் களவு போக வாய்ப்பு உண்டு.
நல்ல நாள்: ஜூன் 17, 18, 19, 20, 21, 26, 27, 28, 29 ஜூலை 3, 4, 8, 9, 15, 16. கவன நாள்: ஜூன் 22, 23- சந்திராஷ்டமம். அதிர்ஷ்ட எண்: 4,7 நிறம்: பச்சை, நீலம்