திருவள்ளூர் : திருவள்ளூர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில், நேற்று மாலை, உற்சவருக்கு திருமஞ்சனம் நடைபெற்றது. திருவள்ளூர், சத்தியமூர்த்தி தெருவில் அமைந்துள்ளது, பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில். இங்கு, அமாவாசையை ஒட்டி, உற்சவருக்கு நேற்று மாலை, 5:30 மணிக்கு திருமஞ்சனம் நடைபெற்று. பின், சிறப்பு அலங்காரத்தில் பெருமாள் அருள்பாலித்தார். ஏராளமானோர் நிகழ்ச்சியில் பங்கேற்று, பெருமாளை வழிபட்டனர்.திருவள்ளூர் பூங்காநகர் சிவ - விஷ்ணு கோவிலில், நேற்று காலை 9:00 மணிக்கு, அமாவாசையை ஒட்டி, சீனிவாச பெருமாளுக்கு அபிஷேகம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் பெருமாளை வழிபட்டனர்.