பதிவு செய்த நாள்
08
நவ
2017
01:11
திருநெல்வேலி: காவிரி மகாபுஷ்கர விழா நடப்பதை போல, தாமிரபரணி புஷ்கரம் விழாவும் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுவது வழக்கம். 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் தாமிரபரணி மகா புஷ்கரம் விழா 2018ம் ஆண்டு அக். 12ல் துவங்கி 23ம் தேதி வரை நெல்லையில் நடத்தப்படவுள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் காவிரி மகாபுஷ்கர ஒருங்கிணைப்பாளர் மகாலட்சுமி சுப்பிரமணியன், வலசை ஜெயராமன், தீட்சதர்கள் சிதம்பரம் தியாகப்பா தீட்சதர், சிவராம், தீட்சதர், தூத்துக்குடி செல்வம் பட்டர், ராமசாமி சர்மா, சென்னை வெங்கடேசன், கணேசன், பேட்டை மணி ஐயர், உட்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் ‘காவிரி மகா புஷ்கரத்தை போன்று நெல்லையில் தாமிரபரணி மகா புஷ்கரத்தையும் வெகு சிறப்பாக நடத்துவது என்றும், மகா புஷ்கர விழாவில் ஆன்மிக சொற்பொழிவுகள், இசை நிகழ்ச்சிகள், கலை நிகழ்ச்சிகள், மகா ஆரத்தி உற்சவம், சைவ திருமுறை இசை நிகழ்ச்சிகள், சுவாமி தீர்த்தவாரி உற்சவம், சுவாமி புறப்பாடு நிகழ்ச்சிகளை சிறப்பாக நடத்துவது குறித்து ஆலோசனை நடைபெற்றது.