திருவரங்கம்: திருவரங்கம் ஸ்ரீமான் மதுரகவி சுவாமி அவர்களின் 113-ம் வருடதிரு அத்யயன மகோற்சவம் (1904 -2017) - ஊஞ்சல் உற்சவம் விழா 2017, 12.11.2017 ஞாயிற்றுக்கிழமை மாலை 6.00 மணிக்கு திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் நடைபெறுகிறது. சூட்டுக்கோல் இராமலிங்க விலாசத்தின் கைங்கரியமாக ஸ்ரீமான் மதுரகவி திருனந்தவனத்தின் சார்பாக ஸ்ரீரங்கத்தில் நம்பெருமாளுக்கு ஊஞ்சல் உற்சவம் விழா நடைபெற உள்ளது. இவ்விழாவில் பெருமாளின் முன்பு தங்க மரக்காலில் நெல் அளக்கும் நிகழ்ச்சி நடைபெற்று, அந்த நெல் பக்தர்களுக்கு வழங்கப்படும்.