அயோத்தியை ஆண்ட வம்சம் சூரிய வம்சம். நீதி, நேர்மை தவறாமல் ஆட்சி புரியும் மன்னர்கள் பிறந்த குலம் இது. கொடிய துன்ப காலத்திலும், உண்மையை விட்டு விலகாமல் சத்தியம் பேசிய ஹரிச்சந்திரன். சனி பாதிப்பிலும் வழி தவறாத நள சக்கரவர்த்தி. பசுக்களுக்கு வாழ்வு தந்த திலீப சக்கரவர்த்தி. சத்தியம், தர்ம வழியில் வாழ்ந்து காட்டிய ராமர் ஆகியோர் சூரிய குலத்தில் தோன்றிய வர்கள். கொடை வள்ளல் கர்ணனும் சூரியனின் பிள்ளையாவார். சூரியனை வழிபட்ட வர்கள் சூரிய குல தோன்றல்களான இந்த மன்னர்களின் நல்லாசியையும் பெறுவர் என்பது உறுதி.