Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
குன்னூரில் குழந்தை ஏசு சிற்றாலய விழா திருவண்ணாமலையில் தீர்த்தவாரி முடிந்து கோவில் திரும்பினார் அருணாசலேஸ்வரர் திருவண்ணாமலையில் தீர்த்தவாரி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருநாங்கூரில் 11 தங்க கருடசேவை: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 ஜன
2018
04:01

மயிலாடுதுறை: திருநாங்கூர் திவ்யதேசத்தில் 11 தங்க கருடசேவை உத்ஸவம் கோலாகலமாக நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

Default Image

Next News

நாகை மாவட்டம் சீர்காழியை அடுத்த திருநாங்கூர் பகுதியில் 108 வைணவ திவ்யதேசங்கள் நாங்கூர் மணிமாடக்கோயில் நாராயண பெருமாள், அரிமேய வின்னகரம்  குடமாடு கூத்தர்,  செம்பொன்னரங்கர், பள்ளிகொண்ட பெருமாள்,  வண்புருடோத்தம பெருமாள்,  வைகுந்தநாதன், திருவெள்ளக்குளம் அண்ணன் பெருமாள், திருமேணிக்கூடம்  வரதராஜ பெருமாள், கீழச்சாலை  மாதவப்பெருமாள், பார்த்தன்பள்ளி,  பார்த்தசாரதி பெருமாள், திருகாவாளம்பாடி கோபாலன் ஆகிய 11 திவ்ய தேச கோயில்கள் அமைந்துள்ளன. இங்கு ஆண்டு தோறும் தை அமாவாசைக்கு மறுநாள் பிரசித்தி பெற்ற 11 கருடசேவை உத்ஸவம் நடைபெருவது வழக்கம்.

இவ்வாண்டு 124ம் ஆண்டு கருட சேவை உத்ஸவம் நேற்று இரவு நடைபெற்றது. கருட சேவையை முன்னிட்டு திருநகரி கல்யாண ரெங்கநாதர் கோயிலில் இருந்து திருமங்கை ஆழ்வார் புறப்பட்டு 11 திவ்ய தேசங்களுக்கு சென்று கருடசேவைக்கு வருமாறு பெருமாள்களை அழைப்பார். அவரது அழைப்பை ஏற்று 11 பெருமாள்களும் தங்களது கோயில்களில் இருந்து புறப்பட்டு மணிமாடக்கோயிலுக்கு நேற்று மா லை எழுந்தருளினர். அவர்களை திருமங்கையாழ்வார் வரவேற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.  பின்னர் 11 பெருமாள்களும் கோயில் மண்டபத்தில் எழுந்தருள சிறப்பு திருமஞ்சணம் நடை பெற்றது. இரவு 12:30மணிக்கு மணிமாட கோயில் ராஜகோபுர வாயிலில் மணவாள மாமுணிகளும், ஹம்ஸ வாகனத்தில் குமுதவள்ளி தாயாருடன் திருமங்கை ஆழ்வாரும் எழுந்தருளி னர். தொடர்ந்து அங்கு 11 பெருமாள்களும் ஒருவர் பின் ஒருவராக தங்க கருடவாகனத்தில் எழுந்தருளினர். அவர்களுக்கு திருமங்கை ஆழ்வார் மங்களாசாசனம் செய்யும் நிகழ்வு நடை பெற்று, கும்ப தீபஆரத்தி எடுக்கப்பட்டு சிறப்பு மிக்க தங்க கருட சேவை உற்சவம் நடைபெற்றது.

அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள் அனைவரும் திருமங்கை ஆழ்வார் அருளிய பாசுரங்களை பாடினர். தொடர்ந்து இரவு 1:30 மணிக்கு, 11 பெருமாள்களும் தங்க கருட வாகனத்தில் வீதியுலா காட்சி நடைபெற்றது. கருடனுக்கு உகந்த வியாழக் கிழமையில் நடை  பெற்ற இந்த தங்க கருட சேவை உத்ஸவத்தில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் மனைவி துர்கா உள்பட தமிழகம் மட்டுமன்றி வெளி மாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்து வந்தி ருந்த 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு 11 பெருமாளையும் ஒரே இடத்தில் கண்டு சேவித்தனர். தொடர்ந்து 11 பெருமாள்களும் 4 மாட வீதிகளையும் வலம் வந்து அதிகாலை மீண்டும் மணிமாடக்கோயிலில் எழுந்தருளினர். உத்ஸவத்தை முன்னிட்டு சீர்காழி டிஎஸ்பி.சேகர் தலைமையில் போலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். மயி லாடுதுறை, சீர்காழியில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பவுர்ணமியில் இருந்து வரும் நான்காவது திதி சங்கடஹர சதுர்த்தியாகும். முழு முதற்கடவுளாகிய விநாயகப் ... மேலும்
 
temple news
அவிநாசி; அவிநாசி ஸ்ரீ கருணாம்பிகை உடனமர் லிங்கேஸ்வரர் கோவில் சித்திரை தேர் திருவிழாவில் 13ம் நாள் ... மேலும்
 
temple news
செஞ்சி; பொன்பத்தி திரவுபதி அம்மன் கோவிலில் அக்னி வசந்த விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.செஞ்சி ... மேலும்
 
temple news
ஆலங்குடி: குரு பெயர்ச்சியை முன்னிட்டு, குரு பரிகார தலமான ஆலங்குடியில் இன்று லட்சார்ச்சனை துவங்கியது. ... மேலும்
 
temple news
கடலூர்; கடலூர் அடுத்த புதுவண்டிப்பாளையம் கரையேறவிட்டக்குப்பத்தில் அப்பர் குளத்தில் கரையேறும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar