அனுதினமும் காலையும் மாலையும் சந்தியா காலங்களில் வீட்டில் விளக்கேற்றி வழிபட வேண்டும். திருவிளக்குக்கு மலர்கள் சமர்ப்பித்து தீபம் ஏற்றி வழிபடும்போது, கீழ்காணும் பாடலைப் பாடி வணங்கலாம்.
முடிவிலா ஆற்றல் உடையாய் போற்றி மூவுலகுந் தொழு மூத்தோய் போற்றி அளவிலாச் செல்வம் தருவாய் போற்றி ஆனந்த அறிவொளி விளக்கே போற்றி
நல்ல நாள் கிழமைகளில் இந்தப் பாடலைப் பாடி திருவிளக்கு நாச்சியாரை வழிபடுவதால், வீட்டில் சகல சவுபாக்கியங்களும் உண்டாகும்; சுபிட்சம் பெருகும்.