பதிவு செய்த நாள்
18
மே
2018
12:05
நாமக்கல்: நாமக்கல், ஆஞ்சநேயர் கோயிலில் உண்டியலில், பக்தர்கள், 49.39 லட்சம் ரூபாய் காணிக்கை செலுத்தியிருந்தனர். நாமக்கல், ஆஞ்சநேயர் கோவில் உண்டியல்கள், மூன்று மாதங்களுக்கு ஒருமுறை திறந்து எண்ணப்படும். அதன்படி, நேற்று, உதவி ஆணையர்கள் ரமேஷ், தமிழரசு, ஆகியோர் முன்னிலையில் உண்டியல் திறக்கப்பட்டது. அதிலிருந்த காணிக்கையை, பக்தர்கள், தன்னார்வலர்கள், ஜெய் நந்தகம் சேவா அறக்கட்டளை நிர்வாகிகள், மகளிர் குழுவினர், வங்கிப் பணியாளர்கள் எண்ணினர். அதில், 49.39 லட்சம் ரூபாய், ஒன்பது கிராம் தங்கம், 740 கிராம் வெள்ளி இருந்ததாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.