பதிவு செய்த நாள்
21
மே
2018
12:05
ஒருசமயம், ஒருவர் நபிகளாரைக் காண காத்து நின்றார். இதுபற்றி, அவரிடம் சொன்ன போது, “அவன் நல்லவனில்லை, இருந்தாலும் உள்ளே வரச்சொல்லுங்கள்,” என்றார். வந்தவரிடம் பரிவுடன் பேசினார். அவர் சென்ற பிறகு, நாயகத்தின் துணைவியார் ஆயிஷா, “அவனை விரும்பாத நிலையிலும், அவனிடம் எப்படி இவ்வளவு அன்பாக பேச முடிகிறது?” என்று கேட்டார்கள். அதற்கு நாயகம்,“இறைவனின் பார்வையில் கெட்ட மனிதன் யார் தெரியுமா? தன்னோடு ஜனங்கள் உறவாட இடந்தராத அளவில் கொடுமொழி பேசுபவன் தான்,” என்றார்.
ஒருசமயம் நாயகம், தன் தோழர்களுடன் அமர்ந்திருந்த போது, அவரது செவிலித்தாய்ஹலீமாவின் கணவர் வந்தார். உடனே நாயகம் தான் அமர்ந்திருந்த விரிப்பின் ஒரு முனையை விரித்து, அவரை அமரச்செய்தார். பின் ஹலீமாவின் தாயார் வந்தார். அவருக்கு மற்றொரு முனையை விரித்துக் கொடுத்தார். இதையடுத்து ஹலீமாவின் சகோதரர் வரவே, எழுந்து நின்று, தன் இடத்தைக் கொடுத்தார். இதில் இருந்து அவரது கனிவான உபசரிப்பை உணரலாம். நமக்கு வேண்டியவர், வேண்டாதவர் அனைவரிடமும் அன்பு காட்டுவோம்.
இன்று நோன்பு திறக்கும் நேரம்: மாலை 6.39 மணி
நாளை நோன்பு வைக்கும் நேரம்: அதிகாலை 4.17 மணி