பதிவு செய்த நாள்
14
ஜூன்
2018
05:06
துணிவே துணை என்று செயல்படும் துலாம் ராசி அன்பர்களே!
இந்த மாதம் பிற்பகுதியில் அதிக நன்மைகள் கிடைக்கும். காரணம் புதன் ஜூன் 24 க்கு பிறகு சாதகமாக இடத்திற்கு வருகிறார். சுக்கிரன் ஜூலை 5 க்கு பிறகு சாதகமான நிலைக்கு வருவதால் நன்மை அதிகரிக்கும். சனிபகவான் 3-ம் இடத்தில் நின்று மாதம் முழுவதும் நன்மை தருவார். மற்ற கிரகங்கள் அனைத்தும் சாதக மற்ற இடத்தில் இருப்பதால் முக்கிய முடிவுகளை தீர சிந்தித்த பிறகே செயல்படுத்த வேண்டும்.
இருப்பினும் குருவின் 5, 7, 9-ம் இடத்துப்பார்வைகள் சிறப்பாக உள்ளதால் எந்த பிரச்னையையும் முறியடித்து வெற்றிக்கு வழி காணலாம். 5-ம் இடத்துப்பார்வையால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பிள்ளைகள் வழியில் சுபநிகழ்ச்சி நடந்தேறும். செல்வாக்கு மேம்படும். பணப்புழக்கம் அதிகரிக்கும்.
7ம் இடத்துப் பார்வையால் மனமகிழ்ச்சி அதிகரிக்கும். உற்சாகம் மேலோங்கும். 9ம் இடத்துப் பார்வையால் குடும்பத்தில் இருந்த பின்னடைவு மறையும். தம்பதியிடையே ஒற்றுமை மேம்படும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பர்.
சனி பகவான் பலத்தால் காரிய அனுகூலம், பொருளாதார வளம் சிறக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி, தொழில் விருத்தி உண்டாகும். புதன் ஜூன் 24 வரை 9-ம் இடத்தில் நிலை கொண்டிருப்பதால் சிலரது பொல்லாப்பை சந்திக்க நேரிடலாம். தீயோர் சேர்க்கையால் சிலர் பணத்தை விரயமாக்குவர். ஜூன் 24க்கு பிறகு பெண்களின் ஆதரவு இருக்கும்.
அவர்களால் பொன், பொருள் சேரும். ஜூன் 24க்கு பிறகு புத்தாடை, அணிகலன் வாங்கலாம். பிள்ளைகளால் மகிழ்ச்சியும், பெருமையும் கிடைக்கும். கணவன், மனைவி இடையே அன்பு மேம்படும். சகோதரிகள் உதவிகரமாக செயல்படுவர். குறிப்பாக ஜூன் 23,24 ல் அவர்களால் நன்மை அதிகம் கிடைக்கும். ஜூன் 18,19,20 ல் உறவினர்களின் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும்.
பணியாளர்கள் அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும்.ஜூன் 16,17, ஜூலை 14,15 ல் கூடுதல் நன்மை உண்டாகும். ஜூன் 24க்கு பிறகு தீயோர் சேர்க்கையால் அவதிப்பட்டவர்கள் அதில் இருந்து விடுபடுவர். கோரிக்கைகள் ஓரளவு நிறைவேறும். தொழிலதிபர்கள் பண இழப்பை சந்திக்க நேரலாம். கவனம். மாத பிற்பகுதியில் நிலைமை சீராகும். ஜூன் 21,22,25,26ல் சந்திர னால் தடைகள் வரலாம். ஜூலை5,6ல் எதிர்பாராத வகையில் பணவரவு இருக்கும்.
கலைஞர்களுக்கு எதிரிகள் வகையில் இருந்த தொல்லைகள், அவப்பெயர், போட்டிகள் முதலியன ஜூலை 5க்கு பிறகு மறையும். அதன்பிறகு புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். பொதுநல சேவகர்கள், அரசியல்வாதிகள் பலனை எதிர்பாராமல் உழைக்க வேண்டியது இருக்கும்.
மாணவர்களுக்கு ஜூன் 24க்கு பிறகு கல்வி வளர்ச்சிக்கான சூழ்நிலை அமையும்.
போட்டிகளில் பங்கேற்று வெற்றி காணலாம். நற்செயலில் ஈடுபட்டு பெற்றோருக்கும் பெருமை சேர்ப்பர்.
விவசாயிகள் சீரான வருமானத்தைக் காண்பர். குறிப்பாக பழ வகைகள், பயறு வகைகள் போன்ற பயிர்கள் மூலம் அதிக லாபத்தை காண்பர். கால்நடை வகையில் எதிர்பார்த்த பலன் கிடைப்பது அரிது.
பெண்கள் பிள்ளைகளின் நலனுக்காக பாடுபடுவர். ஜூன் 24 வரை குடும்பத்தாரிடம் பொறுமையுடன் விட்டுக் கொடுப்பது நல்லது. வேலைக்கு செல்லும் பெண்கள் அதிகமாக உழைக்க வேண்டிய திருக்கும்.
முக்கிய பொறுப்புகளை பிறரிடம் ஒப்படைக்க வேண்டாம். பணிவிஷயமாக வெளியூர் செல்ல நேரிடலாம். உங்களால் குடும்பம் சிறக்கும். வேலைக்கு செல்லும் பெண்கள் சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கலாம். ஜூன் 27,28,29 ஆகியவை சிறப்பான நாட்களாக அமையும். புத்தாடை, அணிகலன்கள் வாங்கலாம். பெற்றோர் வீட்டில் இருந்து பொருட்கள் வரப்பெறலாம். ஜூலை7,8ல் விருந்து, விழா என சென்று வருவீர்கள்.
சகோதர வழியில் பணஉதவி கிடைக்கும்.
* நல்ல நாள்: ஜூன் 16,17,18,19,20,23,24, 27,28,29, ஜூலை 5,6,7,8,14,15,16
* கவன நாள்: ஜூலை 9,10,11 சந்திராஷ்டமம்
* அதிர்ஷ்ட எண் 4,7 நிறம்: பச்சை, கருப்பு
* பரிகாரம்:
● நவக்கிரகங்களில் ராகுவுக்கு பாலபிேஷகம்
● அஷ்டமியன்று பைரவருக்கு வடைமாலை
● வெள்ளிக்கிழமையில் சிவாலய வழிபாடு