Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் ... சோழபுரம் அருள்மொழிநாதர் கோயில் தேரோட்டம் சோழபுரம் அருள்மொழிநாதர் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காரைக்கால் அம்மையார் மாங்கனி திருவிழா: மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சி
எழுத்தின் அளவு:
காரைக்கால் அம்மையார் மாங்கனி திருவிழா: மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சி

பதிவு செய்த நாள்

26 ஜூன்
2018
10:06

காரைக்கால்: காரைக்கால் அம்மையார் மாங்கனி திருவிழாவை முன்னிட்டு நேற்று பரமதத்தர் செட்டியார் மாப்பிள்ளை அழைப்பு நடந்தது. சிவபெருமானால் அம்மையே அன்று அழைக்கப்பட்ட காரைக்கால் அம்மையாரின் இயற்பெயர் புனிதவதியார்.63 நாயன்மார்களின் பெண் நாயன்மாரான காரைக்கால் அம்மையாரின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் வகையில் ஆண்டுதோறும் மாங்கனி திருவிழா நடத்தப்படுகிறது.இத்திருவிழா நேற்று மாலை விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது.

பரமதத்த செட்டியார் பட்டுவேட்டி, முத்து மாலைகளுடன் மாப்பிள்ளை அலங்காரத்தில் அலங்கரிக்கப்பட்டு ஆற்றங்கரை சித்தி விநாயகர் கோவிலில் இருந்து ஊர்வலமாக காரைக்கால் அம்மையார் கோவிலுக்கு நேற்று இரவு அழைத்து வரப்பட்டார்.முன்னதாக விநாயகர் கோவிலில் சிறப்பு தீபாரதனை நடத்தப்பட்டு பாரம்பரியப்படி மாப்பிள்ளையான பரமதத்தர் செட்டியாருக்கு திருஷ்டி கழிக்கப்பட்டது. பின் உபயதாரர்களான மாப்பிள்ளை வீட்டார் முன்செல்ல பரமத்தார் செட்டியார் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் மாப்பிள்ளை கோலத்தில் முக்கிய வீதி வழியாக ஊர்வலம் நடந்தது.இன்று(26ம் தேதி) காலை புனிதவதியார் தீர்த்த குளத்தில் புனிதநீராடும் நிகழ்ச்சியும் காலை 7மணிக்கு மணமகன் பரமதத்தர் குதிரை வாகனத்தில் திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளம் நிகழ்ச்சி நடக்கிறது. காலை11 மணிக்கு காரைக்கால் அம்மையார் பரமதத்ருக்கு திருக்கல்யாணம் நடக்கிறது.மாலை பிஷாடண மூர்த்தி வெள்ளைசாத்தி புறப்பாடும்,இரவு திருமணம் முடிந்த காரைக்கால் அம்மையார் பரமதத்தர் முத்து பல்லக்கிள் வீதி உலா நடைபெறுகிறது.நாளை 27ம்தேதி அதிகாலை 3 மணிக்கு பிஷாடணமூர்த்தி மற்றும் பஞ்ச மூர்த்திக்களுக்கு மகா அபிஷேகமும்.காலை 7மணிக்கு பரமசிவன் அடியார் கோலத்துடன் பவழக்கால் விமானத்தில் பத்மாசனத்தமர்ந்து வேதபாராயணத்துடனும்,வாத்தியங்கள் முழுங்க திருவீதியுலா நடைபெற்றும்.அச்சமயம் பக்தர்கள் வீடுகளில் இருந்து மாங்கனிகளை வீசும் நிகழ்ச்சி மிகவிமர்ச்சியாக நடக்கிறது.மேலும் அம்மையார் மாங்கனித் திருவிழாவை முன்னிட்டு வரும் 27ம்தேதி அன்று அரசு மற்றும் தனியார் பள்ளி உள்ளூர் விடுமுறை மாவட்டநிர்வாகம் சார்பில் அறிவித்துள்ளது.விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி விக்ராந்தராஜா மற்றும் அறங்காவலர் குழுவினர் சிறப்பாக செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அழகர்கோவில்: மதுரை சித்திரை திருவிழாவில் முத்திரை பதிக்கும் அழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்விற்காக ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்; தஞ்சாவூர் அருகே திட்டையில் உள்ள வசிஷ்டேஸ்வரர் கோவிலில் குருபெயச்சி விழா வெகு சிறப்பாக ... மேலும்
 
temple news
வைகை ஆறு இன்று போல் அன்றில்லை. இந்த நதிக்கரையில் ஏராளமான மரங்கள் இருந்தன. அவற்றில் வாசனை மலர்கள் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், - 108 திவ்ய தேசங்களில் ஸ்ரீரங்கம், திருப்பதிக்கு அடுத்து 3வது முக்கிய திவ்ய தேசமாக ... மேலும்
 
temple news
கோவை; கோவையில் பழமை வாய்ந்த, கோட்டை சங்கமேஸ்வரர் கோவில் சித்திரை தேர் திருவிழா, 32 ஆண்டுகளுக்கு பின், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar