திருப்போரூர் முருகன் கோவில் உண்டியலில் ரூ.43 லட்சம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14ஜூலை 2018 02:07
திருப்போரூர் : திருப்போரூர் முருகன் கோவில் உண்டியல்களில், 42.93 லட்சம் ரூபாய், பக்தர்களின் காணிக்கையாக கிடைத்துள்ளது.திருப்போரூர் முருகன் கோவிலில், மூன்று மாதங்களுக்கு ஒரு முறை, உண்டியல் காணிக்கைகள் எண்ணப்படுவது வழக்கம். கோவிலில் உள்ள ஒன்பது உண்டியல்கள் நேற்று (ஜூலை 13)ல் திறக்கப்பட்டு எண்ணப்பட்டன. அதில், 42 லட்சத்து, 93 ஆயிரத்து, 276 ரூபாய் பணமாகவும், 431 கிராம் தங்கமும், 4 கிலோ வெள்ளியும் கிடைத்துள்ளது.