பதிவு செய்த நாள்
16
ஜூலை
2018
11:07
உடுமலை: உடுமலை அருகே, மேற்குதொடர்ச்சிமலையில் பலத்த மழை பெய்து வருவதால், திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவிலை, வெள்ளம் சூழ்ந்தது. திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே, திருமூர்த்திமலை அடிவாரத்திலிருந்து, 900 மீ., உயரத்தில், பஞ்சலிங்க அருவி அமைந்துள்ளது. ஒருவாரமாக, மேற்குதொடர்ச்சி மலையில் பருவமழை பெய்து வருவதால், பஞ்சலிங்க அருவிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து, சுற்றுலா பயணியர் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பஞ்சலிங்க அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதியில் பருவமழை தீவிரமடைந்து உள்ளதால், காட்டாற்றில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.இதனால், அருவியில் நீர்வரத்து அதிகரித்து, மலையடிவாரத்திலுள்ள அமணலிங்கேஸ்வரர் கோவிலை, வெள்ளம் சூழ்ந்துள்ளது.அடிவாரத்தில் அமைந்துள்ள கோவிலுக்கு செல்ல, பொதுமக்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதாக, கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.