பதிவு செய்த நாள்
21
ஜூலை
2018
11:07
ராமநாதபுரம்: ஆடி முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு அம்மன் கோயில்களில் பக்தர்கள் குவிந்தனர். அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம், அலங்காரம் நடந்தது. ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம் என்பதால், ஆடி வெள்ளிக்கிழமையான நேற்று அம்மன் கோயிலில் சிறப்பு பூஜை நடந்தது. மல்லம்மாள் கோயிலில் அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம் அலங்காரம் நடந்தது. சந்தன காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். வெட்டுடைய காளியம்மன், அல்லிக்கண்மாய் மாரியம்மன் கோயில், கேணிக்கரை முத்தாலம்மன் கோயில், ஓம் சக்திநகர் ஒத்தப்பனை காளியம்மன் கோயில், சாயக்காரத்தெரு முத்துமாரியம்மன், தையல்காரத்தெரு மஞ்சனமாரியம்மன் கோயில், தாயுமான சுவாமி கோயில் தெரு மந்தை மாரியம்மன் கோயில் உள்ளிட்ட கோயில்களில் அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம், அலங்காரம் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் அம்மன் தரிசனம் பெற்றனர். கீழக்கரை: கீழக்கரை, தட்டார் தெருவில் உள்ள உக்கிரவீரமா காளியம்மன் கோயிலில் முதல் வார ஆடி வெள்ளியை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. மூலவருக்கு 18 வகையான அபிஷேக ஆராதனை செய்யப்பட்டன. பெண்கள் சக்தி ஸ்தோத்திரம், பஜனை, நாமாவளியை பாடினர். சந்தனக்காப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏற்பாடுகளை விஸ்வக்கிய தங்கம் வெள்ளி தொழிலாளர் சங்கத்தினர் செய்திருந்தனர்.