தர்மபுரி ஆதீனத்திற்குரிய தேவஸ்தான கோயில்களில் ஆடி வெள்ளியன்று நவசக்தி அர்ச்சனை செய்வார்கள். அம்மனுக்கு சந்தனக் காப்பு அலங்காரம் செய்துவிட்டு 9 சிவாச்சாரியார்கள் 9 வகை மலர்களால் 9 சக்திகளை ஒரே சமயத்தில் அர்ச்சனை செய்வதுதான் நவசக்தி அர்ச்சனை எனப்படும்.