சிவபெருமானுக்கு பஞ்சமுக அர்ச்சனை, பராசக்திக்கு நவசக்தி அர்ச்சனை, முருகப்பெருமானுக்கு ஷண்முகார்ச்சனை செய்வது போல பைரவருக்கு அஷ்டவித அர்ச்சனை செய்விப்பதால் எண்ணிய காரியங்கள் நிறைவேறும். எட்டுவித மலர்கள் கொண்டு எட்டுவித பட்சணங்கள் சமர்ப்பித்து, எட்டு வகை அன்னங்கள் நிவேதிக்கப்பட்டு எட்டுவித ஆரத்திகள் காட்டி செய்யும் பூஜையே அஷ்டவித அர்ச்சனை வழிபாடு ஆகும்.