பதிவு செய்த நாள்
16
ஆக
2018
04:08
விதியை மதியால் வெல்லும் விருச்சிக ராசி அன்பர்களே!
புதன் ஆக.28ல் இடம் மாறிய பின் நன்மை தருவார். சுக்கிரன் ஆக. 31 வரை நற்பலனைக் கொடுப்பார். சூரியன், செவ்வாய், கேதுவால் நற்பலன் தொடரும். மற்ற கிரகங்கள் சாதகமற்ற நிலையில் இருந்தாலும் பாதகம் உண்டாகாது. கேதுவால் மனதில் பக்தி உயர்வு மேம்படும். எடுத்த முயற்சி அனைத்திலும் வெற்றி காணலாம். பொருளாதார வளம் மேம்படும். மக்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். குருபகவான் ராசிக்கு 12-ம் இடத்தில் இருக்கிறார். இது சுமாரான நிலையே. அவரால் பொருள் விரயம் ஏற்படலாம். வீண் அலைச்சல் ஏற்படும். புதனால் உங்களுக்கு ஏற்பட்ட அவப்பெயர், செல்வாக்கு பாதிப்பு, வீண் மனக்கவலை முதலியன ஆக.28க்கு பிறகு மறையும்.
குடும்ப வாழ்வில் குதூகலம் உண்டாகும். ஆடம்பர வசதிகள் பெருகும். புதிய வீடு, மனை, வாகனம் வாங்க யோகமுண்டு. எதிர்பாராத வருமானம் இருக்கும். சொந்தபந்தங்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். ஆக. 28க்கு பிறகு பெண்கள் மிகவும் அனுகூலமாக இருப்பர். அவர்களால் பொன், பொருள் சேரும். ஆக.19,20, செப்.15,16ல் இனிய அனுபவம் கிடைக்கப் பெறுவீர்கள். விருந்து, விழா என சென்று வருவீர்கள். செப்.11,12ல் உறவினர் வருகையால் நன்மை காண்பீர்கள். ஆனால் ஆக.26,27ல் அவர்களின் வகையில் சற்று ஒதுங்கி இருக்கவும்.
பாதுகாப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் சிறப்பான முன்னேற்றத்தைக் காணலாம். தனியார் துறையில் வேலை பார்ப்பவர்கள் ஆக.28 வரை வீண் பொல்லாப்பை சந்திக்க நேரிடலாம். பொறுமையுடன் விட்டுக் கொடுத்து போகவும். அதன் பிறகு சூரியனோடு புதன் சேர்ந்து புத ஆதித்ய யோகம் உண்டா வதால் பதவி உயர வாய்ப்புண்டு.
பணியிடத்தில் திருப்திகரமான நிலை உருவாகும். பிறருடைய உதவியை நாடாமல் எதையும் சாதிக்கும் வல்லமை உண்டாகும். எதிர்பார்த்த கோரிக்கைகள் நிறைவேறும். சக பெண் ஊழியர்கள் ஆதரவுடன் இருப்பர். செப். 8,9,10ல் சிறப்பான நன்மையைக் காணலாம். உங்கள் அதிகாரம் கொடிகட்டி பறக்கும்.
தொழில், வியாபாரம் முன்னேற்ற பாதையில் இருக்கும். எதிரிகளின் இடையூறு இருக்கும் இடம் தெரியாமல் போகும். பொருளாதார வளம் மேம்படும். கடந்த கால உழைப்பின் பலனாக திடீர் ஆதாயம் கிடைக்கும். ஆன்மிக சம்பந்தபட்ட மற்றும் பூஜை பொருட்கள் வியாபாரம் செய்பவர்கள் அதிக லாபத்தை பெறுவர். தீயோர் சேர்க்கையால் பணத்தை விரயமாக்கியவர்கள் அவர்களின் பிடியில் இருந்து ஆக.28க்கு பிறகு விடுபடுவர். ஆக. 31, செப்.1ல் திடீர் பணவரவு இருக்கும். ஆக.17,18,21,22,23, செப்.13,14ல் சந்திரனால் தடைகள் வரலாம். சனி, ராகுவால் சிலருக்கு பொருள் களவு போகலாம். பிறருக்கு கட்டுப்பட்டு போகும் நிலையும் ஏற்படலாம்.
கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். ரசிகர்களின் மத்தியில் புகழும், பாராட்டும் கிடைக்க பெறுவீர்கள். சகபெண் கலைஞர்கள் ஆதரவுடன் இருப்பர். ஆக.31க்கு பிறகு சுக்கிரன் இடம் மாறுவதால் புதிய ஒப்பந்தம் பெறுவதில் தடைகளை சந்திக்க வேண்டியதிருக்கும். அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்கள் முன்னேற்ற பாதையில் செல்வர். புதிய பதவி கிடைக்கும். தொண்டர்களின் மத்தியில் செல்வாக்கு பெருகும். மாணவர்கள் சிறப்பான நிலையில் இருப்பர். ஆசிரியர்களின் மத்தியில் நற்பெயர் கிடைக்கும். தேர்வில் நல்ல மதிப்பெண் கிடைக்கும். போட்டியில் வெற்றி உண்டாகும்.
விவசாயிகளுக்கு சீரான மகசூல் கிடைக்கும். பழவகைகள், கீரை வகைகளில் நல்ல வருவாய் கிடைக்கும். கால்நடைகள் மூலம் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். புதிய சொத்து வாங்கும் எண்ணம் கைகூடும். வழக்கு விவகாரங்களில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். பக்கத்து நிலத்துக்காரர்கள் உதவிகரமாக இருப்பர். பெண்கள் குடும்பத்தாரிடம் நன்மதிப்பை பெற்று மகிழ்வர். குடும்பத்தோடு புனித தலங்களுக்கு சென்று வருவீர்கள். ஆக.24,25ல் புத்தாடை, அணிகலன்கள் வாங்கலாம். செப்.2,3ல் விருந்து விழா என சென்று வரும் வாய்ப்பு கிடைக்கும்.
பணிபுரியும் பெண்களுக்கு புதிய பதவி தேடி வரும். ஆக. 28க்கு பிறகு சுய தொழில் செய்து வரும் பெண்கள் சிறப்பான பலனை பெறுவர். வங்கி கடன் எளிதாக கிடைக்கும். தனியார் துறையில் வேலைக்கு செல்லும் பெண்கள் சலுகை கிடைக்கப் பெறுவர். சக ஊழியர்கள் ஆதரவுடன் செயல்படுவர்.
* நல்ல நாள்: ஆக.19,20,24,25,31, செப்.1,2,3,8,9,10,11,12,15,16
* கவன நாள்: செப்.4,5 சந்திராஷ்டமம்
* அதிர்ஷ்ட எண்: 1,9. நிறம்: சிவப்பு, பச்சை
பரிகாரம்:
● சனிக்கிழமையில் ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை
● சங்கடஹர சதுர்த்தியன்று விநாயகருக்கு அபிேஷகம்
● புனர்பூச நட்சத்திரத்தன்று ராமருக்கு துளசி அர்ச்சனை