பதிவு செய்த நாள்
05
செப்
2018
11:09
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் கிருஷ்ணஜெயந்தி விழா நடந்தது. இதை முன்னிட்டு நேற்று முன்தினம் (செப்., 3ல்) இரவு 8:00 மணிக்கு கிருஷ்ணன் பிறப்பு புராணம் வாசிக்கும் நிகழ்ச்சியை வேதபிரான் பட்டர் நடத்தனார். இரவு 10:00 மணிக்கு ஆண்டாள், ரெங்கமன்னார், பெரியபெருமாள் மற்றும் விளையாட்டு கண்ணன் சிறப்பு அலங்காரத்தில் மாடவீதிகள், கந்தாடைவீதி வழியாக ரதவீதி வந்தனர். நான்கு வீதி சந்திப்பிலும் கம்மாபட்டி யாதவர் சமூகத்தினர் உறியடித்தனர்.
பின்னர் ஆடிப்பூர பந்தலில் ஆண்டாள், ரெங்கமன்னார், பெரியபெருமாள், கிருஷ்ணருக்கு ரகுபட்டர் சிறப்பு பூஜைகள் செய்தார்.அப்போது இளைஞர்கள் வழுக்குமரம் ஏறி பலகாரத்தை பெற்று சுவாமிகளின் முன்வைத்து வணங்கி எடுத்து சென்றனர். தக்கார் ரவிசந்திரன், செயல் அலுவலர் இளங்கோவன், கோயில் பட்டர்கள், ஸ்தானிகம் ரமேஷ், அலுவலர்கள் மற்றும் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் நடந்த கிருஷ்ண ஜெயந்தியை தொடர்ந்து ஆண்டாள்,ரெங்கமன்னார், பெரியபெருமாள், கிருஷ்ணர் மற்றும் விளையாட்டு கண்ணன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர்.